இளங்கோ அடிகள் சமயம் எது? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளங்கோ அடிகள் சமயம் எது? நூல் அட்டை
நூல் பெயர்:இளங்கோ அடிகள் சமயம் எது? நூல் அட்டை
ஆசிரியர்(கள்):அ. ச. ஞானசம்பந்தன்
வகை:ஆய்வு, சைவ சமயம்
காலம்:ஏப்ரல் 1996
மொழி:தமிழ்
பக்கங்கள்:158
பதிப்பகர்:கங்கை புத்தக நிலையம்

இளங்கோ அடிகள் சமயம் எது? என்பது அ. ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்நூலை கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

உள்ளடக்கங்கள்[தொகு]

  • இளங்கோ அடிகள் சமயம் எது
  • இளங்கோ கண்ட ஊழ்
  • ஒரே பிறப்பில் வீடு
  • கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்
  • இளங்கோவும் திருவள்ளுவரும்

இளங்கோ அடிகள் சமயம் எது[தொகு]

இப்பகுதியில் இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும், ஜைன சமயத்தினை சார்ந்தவன் என்பதையும் மறுத்து ஆசிரியர் கூறுகிறார். இறுதியாக இளங்கோவடிகள் வேறு எம்மதத்தினை சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் உறுதியாக ஜைன சமயத்தினை சார்ந்தவர் இல்லை என்கிறார்.

இளங்கோ கண்ட ஊழ்[தொகு]

ஊழ் எனும் வினையைப் பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கும் பகுதிகளை ஆய்வு செய்து கூறியுள்ளார்.

ஒரே பிறப்பில் வீடு[தொகு]

சிலப்பதிகார காவியத்தலைவியான கண்ணகியின் வளர்ச்சியை சைவ, வைணவ நெறிகளின் அடிப்படையில் ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார்.

கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்[தொகு]

சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியையும், பெரியபுராணத்தில் வருகின்ற மூன்று பெண்களில் முதியவரான காரைக்கால் அம்மையாரையும் ஒப்பிட்டு இப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர்

இளங்கோவும் திருவள்ளுவரும்[தொகு]

நீதி நூலை எழுதிய திருவள்ளுவரையும், காப்பியம் எழுதிய இளங்கோவையும் இப்பகுதியில் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இவற்றையும் காண்க[தொகு]

  1. ஐம்பெருங் காப்பியங்கள்
  2. சைவ சமய இலக்கியங்கள்
  3. தமிழாய்வு நூல்கள்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இளங்கோ அடிகள் சமயம் எது