இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002
Appearance
விடுதலைப் புலிகள் இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 நோர்வே நாட்டின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே பெப்ரவரி, 2002 காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறிக்கும். புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.