இரங்கல் மூன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரங்கல் மூன்று என்னும் நூல் சிற்றம்பல நாடிகள் என்னும் சைவப் பெரும்புலவரால் எழுதப்பட்டது. காலம் 14-ஆம் நூற்றாண்டு.

செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் என்பன மூன்று காலங்கள். இந்தக் காலப் பேறுகளை எண்ணி அவற்றைப் பெறவில்லையே என ஏங்குவதாப் பாடல்கள் அமைந்துள்ளன.

  • செல்காலத்திரங்கல் பகுதியில் 54 கண்ணிகள் உள்ளன.

பாடல் எடுத்துக்காட்டு:

பொங்கும் பவத்தொடர்ச்சி போக்குதற்கு முன்னமே
கங்கைநகர் மெய்கண்டான் காற்கமலம் பெற்றிலமே
மெய்கண்டான் என்பது இவரது ஆசிரியர் பெயர்
  • நிகழ்காலத்திரங்கல் பகுதியில் 50 கண்ணிகள் உள்ளன.

பாடல் எடுத்துக்காட்டு:

ஆகம சீலரைப் பாரீர் அம்பலவாணரைப் பாரீர்
ஏகன் அனேகனைப் பாரீர் இன்ப உருவனைப் பாரீர்
  • வருங்காலத்திரங்கல் பகுதியில் 49 கண்ணிகள் உள்ளன.

பாடல் எடுத்துக்காட்டு:

நீங்காத பேரறிவில் நீங்காமல் ஒன்றுபட்டே
ஆங்காரம் தீர அடங்குவதும் எக்காலம்

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்கல்_மூன்று&oldid=1126515" இலிருந்து மீள்விக்கப்பட்டது