இந்திய மனித உரிமைக்கட்சி
Jump to navigation
Jump to search
இந்திய மனித உரிமைக்கட்சி | |
---|---|
தலைவர் | இளையபெருமாள் |
தொடக்கம் | 1984 |
தலைமையகம் | தமிழ்நாடு, இந்தியா |
இந்திய மனித உரிமைக்கட்சி (india manitha urimai katchi) என்பது தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எல்.இளையபெருமாள் இதனை தோற்றுவித்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார் இளையபெருமாள். 1996 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். எனினும் அவரை எதிர்த்து போட்டியிட்ட இளையெருமாள் 35 சதவீத வாக்குகளை பெற்றார். அவர் மறைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது.[1][2][3]