இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1சி
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி (IRNSS-1C) என்பது இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள்கள் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். இதுபோல் இவ்வரிசையில் மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.[1][2]
உருவாக்கம்[தொகு]
இச்செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியது. இடஞ்சுட்டும் அமைப்பில் தன்னிறைவு அடையும் பொருட்டு இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.[3]
ஏவுதல்[தொகு]
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து 15 அக்டோபர் 2014 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[4]
இதையும் பார்க்கவும்[தொகு]
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
- ஐஆர்என்எஸ்எஸ் 1-டி
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "IRNSS-1A". 30 மார்ச் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IRNSS". இசுபேசு.இசுகைராக்கெட் இணையத்தளம். 30 மார்ச் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ISRO: After GSLV launch, PSLV C24 with IRNSS-1B likely in March". India. 5 January 2014. http://www.indiatvnews.com/news/india/isro-after-gslv-launch-pslv-c-with-irnss-b-likely-in-march--32118.html. பார்த்த நாள்: 6 January 2014.
- ↑ "India launches third navigation satellite". 16 October 2014 அன்று பார்க்கப்பட்டது.