உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். மகாதேவன் (நீதிபதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதியரசர்
ஆர். மகாதேவன்
தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்-பொறுப்பு
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2024
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்சஞ்சய் வி. கங்காபூர்வாலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1963 (1963-06-10) (அகவை 60)
சென்னை
முன்னாள் கல்லூரிசென்னை சட்டக் கல்லூரி

ஆர். மகாதேவன் (R. Mahadevan-பிறப்பு 10 சூன் 10,1963) என்பவர் ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காப்பூர்வாலா 23 மே 2024 அன்று ஓய்வு பெற்ற பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பொறுப்பேற்றார்.[1][2]

மகாதேவன் 1963ஆம் ஆண்டு சூன் 10ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரி சட்டப் பட்டம் பெற்றார். சட்டப் பட்டம் முடித்த பிறகு 1989ஆம் ஆண்டில் சென்னை வழக்குரைஞர் கழகத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். மறைமுக வரிகள், சுங்க மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டத்துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் அரசு மனுதாரராகவும் (வரி) பணியாற்றிய இவர் 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._மகாதேவன்_(நீதிபதி)&oldid=3966555" இலிருந்து மீள்விக்கப்பட்டது