ஆதித்த வல்லையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதித்த வல்லையன் என்பவன் மாறவர்மன் விக்கிம பாண்டியனின் படைத்தலைவன். இந்தப் பாண்டியன் தில்லையைக் கைப்பற்ற இவன் உதவியிருக்கிறான். இவனது இந்த உதவியையும், போர்த்திறமையையும் பாராட்டித் தாயின் நல்ல பெருமாள் என்னும் புலவர் பாடிய ஆவணப்பாடல்கள் ஆறு கல்வெட்டுப் பதிவாக உள்ளன. [1]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிதம்பரம் கோயில் தெற்குக் கோபுரத்துக்கு எதிரே உள்ள நந்தி மண்டபத்தில் உள்ள மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டு, 1248.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்த_வல்லையன்&oldid=1791083" இலிருந்து மீள்விக்கப்பட்டது