ஆண்டாள் பிரியதர்சினி
ஆண்டாள் பிரியதர்சினி | |
---|---|
பிறப்பு | ஆண்டாள் பிரியதர்சினி 5 அக்டோபர் 1962 பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
கல்வி | ஆய்வியல் நிறைஞர் (ஆங்கில இலக்கியம்) |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர் |
பெற்றோர் | சுப்புலட்சுமி (தாய்) ஆ. கணபதி (தந்தை), |
வாழ்க்கைத் துணை | பால. இரமணி |
வலைத்தளம் | |
http://andalpriyadarshini.blogspot.com/ |
ஆண்டாள் பிரியதர்சினி (Andal Priyadarshini) ஒரு தமிழ் மொழி கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தற்போது அவர் கோயம்புத்தூர் பொதிகை தொலைக்காட்சி ஒளியலை வரிசையின் தலைமை செயலராகப் பணியாற்றி வருகிறார்[1][2]. தற்கால பெண் படைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
விருதுகள்
[தொகு]கவி செம்மல் மற்றும் எழுத்துலக சிற்பி என்ற பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.[3].சென்னை சிறீ சாரதா வித்யாலயா பள்ளியில் படித்தார், அப்பள்ளியில் சிறந்த மாணவர் விருது பெற்றார்.[4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் 05.10.1962 அன்று பிறந்தார். பெற்றோர்:கவிஞர் ஆ.கணபதி புலவர் - சுப்புலட்சுமி. சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கல்லூரிப் படிப்பும், முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்டமும் ஆங்கில இலக்கியத்தில் பெற்றுள்ளார். இவரின் கணவர் கவிஞர் பால இரமணி ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.
படைப்புகள்
[தொகு]கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, திறனாய்வு என இதுவரை பல படைப்புகளைப் படைத்துள்ளார்.
புத்தகங்கள்
[தொகு]- சுருதி பிசகாத வீணை
- விடிவைத் தேடி
- புதிய திருப்பாவை
புதினங்கள்
[தொகு]- தகனம்
- கனவுகள் கைப்பிடிக்குள்
- முதல் ஒளிபரப்பு ஆரம்பம்
- தாளம் தப்பிய தாலாட்டு
குறும் புதினங்கள்
[தொகு]- சிகரம்சிலந்திக்கும் எட்டும்
- கதாநாயகி
- சாருலதா
- வேடிக்கை மனிதர்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
[தொகு]- சுருதி பிசகாத வீணை
- ரிஷிமு்மனுஷீயும்
- தோஷம்
- தலைமுறைதாகம்
- பெருமூச்சின் நீளம்
கவிதைத் தொகுப்புகள்
[தொகு]- புதிய திருப்பாவை
- சுயம் பேசும் கிளி
- முத்தங்கள் தீர்ந்துவிட்டன
- சூரியனை விடிய வைப்போம்
- தோகையெல்லாம் துப்பாக்கிகள்
கட்டுரைகள்
[தொகு]- பெண் எழுத்து
- விடிவைத்தேடி
- தேசம் மிச்சமிருக்கும்
விருதுகள்
[தொகு]- கவிதைகளுக்காக 2000ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து விருது
- தோஷம் சிறுகதைக்காக லில்லி தேவசிகாமணி விருது
- உண்டியல் கதைக்காக பாவலர் முத்துசாமி விருது
- கழிவு சிறுகதைக்காக இலக்கியச்சிந்தனை விருது
- சுயம்பேசும் கிளி கவிதைத் தொகுப்பிற்காக நாகப்பன் ராஜம்மாள் விருது
- துகனம் புதினத்திற்காக காசியூர் ரங்கம்மாள் விருது
- அவனின் திருமதி, தீ, தோஷம் சிறுகதைகள் ஆனந்தவிகடன் வைரவிழாவில் 5000ரூ ஒவ்வொன்றும் பரிசு பெற்றன.
- தினமணி புத்தக கண்காட்சியில் 3000ரூ பரிசு
- சாணஅடுப்பும்,சூரிய அடுப்பும் இந்திய அரசின் பரிசு பெற்றது
பட்டங்கள்
[தொகு]- நெல்லை இலக்கிய வட்டம் எழுத்துலகச்சிற்பி பட்டம் வழங்கியுள்ளது.
- தேனீஇலக்கிய கழகம் கவிச்செம்மல்.
சிறப்புகள்
[தொகு]- 2003ல் டிசம்பர் 11 பாரதியார் பிறந்ததின விழாவில் அன்றைய இந்தியக் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தலைமையில் கவியரங்கத்தில் கவிதை வாசித்தார்.
- சாகித்ய அகாதமி பெண்படைப்பாளர் படைப்புகள் தொகுதியில் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
- பெண்கவிஞர்களின் தொகுப்புநூலான பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பில் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.
பாடநூல்களில் படைப்புகள்
[தொகு]- வானவில் வாழ்க்கை ஸ்டெல்லாமேரி கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- கதாநாயகி கேரளா பல்கலைக்கழகத்தில் பள்ளி இறுதிவகுப்பிற்குப் பாடத்திட்டமாக உள்ளது.
- தகனம் திருச்சி ஜெயின்ட்ஜோசப் கல்லூரியில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seminars, awards mark World Women's Day in Coimbatore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 March 2014. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Seminars-awards-mark-World-Womens-Day-in-Coimbatore/articleshow/31700553.cms. பார்த்த நாள்: 14 January 2016.
- ↑ http://www.dinamalar.com/district_detail.asp?id=931357
- ↑ Who's Who of Indian Writers. Vol. A–M. 1999. p. 47.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-06. Retrieved 2017-07-19.
வெளி இணைப்புகள்
[தொகு]- Andal Priyadarshini at blogspot.in