அவனியாபுரம் கல்யாண சுந்தரேசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 9°52′58.6″N 78°06′43.6″E / 9.882944°N 78.112111°E / 9.882944; 78.112111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
புவியியல் ஆள்கூற்று:9°52′58.6″N 78°06′43.6″E / 9.882944°N 78.112111°E / 9.882944; 78.112111
பெயர்
பெயர்:அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
அமைவிடம்
ஊர்:அவனியாபுரம், மதுரை
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கல்யாண சுந்தரேஸ்வரர்
தாயார்:பாலமீனாம்பிகை
தல விருட்சம்:வில்வ மரம்
தீர்த்தம்:சூர்ய தீர்த்தம்
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகளுக்கு முன்

கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் மதுரை, அவனியாபுரம், மதுரை என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறு[தொகு]

இக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர் ) மூலவராகவும், பாலாம்பிகை தயாராகவும் அருள் பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் வில்வம் ஆகும். மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் ‌போது தோழியர்கள் கேட்டுக் ‌கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இதுவே இத்தல வரலாறு ஆகும்.

தெய்வங்கள்[தொகு]

முக்கிய பண்டிகைகள்[தொகு]

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]