அசோக் குமார் சவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் குமார் சவுகான்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2013–2015
முன்னையவர்சிஎச் பிரேம் சிங்
பின்னவர்அஜய் தத்
தொகுதிஅம்பேத்கர் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
வாழிடம்புது தில்லி
மூலம்: Ashok Kumar Chauhan

அசோக் குமார் சவுகான் (Ashok Kumar Chauhan) (அசோக் குமார் அல்லது அசோக் சௌஹான் என அறியப்படுகிறார்) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், தில்லி மாநில சட்டமன்றத்தில் உள்ள அம்பேத்கர் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2013 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அம்பேத்கர் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக சவுகான் அறிவிக்கப்பட்டார். இவர் 11670 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் குஷி ராம் சுனாரை தோற்கடித்து, அந்த இடத்தை வென்றார் [2]

2014 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சிக்குள் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார ஆட்சியைக் கண்டு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். இவர் சுதந்திரமான பேச்சு மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனத்தின் கருத்தை நம்புவதாகவும், சமூக-பொருளாதார நிலைப் படிநிலையில் மிகவும் தாழ்ந்த நிலையில் வாழும் லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதாக சபதம் செய்துள்ளார். [3]

2015 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் அம்பேத்கர் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அஜய் தத்திடம் 42460 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ambedkar Nagar - Ashok Kumar Chauhan, Candidates Delhi 2013". Aam Aadmi Party official website.
  2. "NCT OF Delhi Result Status". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 16 December 2013.
  3. Former AAP legislator Ashok Chauhan joins BJP
  4. "Delhi verdict: How ordinary trio became Aam Aadmi MLAs". The Times of India. 12 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_குமார்_சவுகான்&oldid=3814471" இலிருந்து மீள்விக்கப்பட்டது