அஃறிணை
அஃறிணை (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்.இஃது அல்+திணை என்று பிரிக்கப்படும்; உயர்திணை அல்லாதது எனப் பொருள்படும். தேவர், மாந்தர், நரகர் என்பவர்களைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாக வகுக்கப்பட்டன.
தொல்காப்பிய நூற்பா[தொகு]
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமென் சொல்லெ
விரவுப்பெயர்கள்[தொகு]
உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள், தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. இருபத்தாறு வகையான விரவுப்பெயர்களைக் காணலாம்.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை