சீ. முத்துசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீ. முத்துசாமி (பிறப்பு: பிப்ரவரி 22 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர், ஆசிரியராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "இரைகள்" (சிறுகதைத் தொகுப்பு, 1978);
  • "விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை" (குறுநாவல், 1980);
  • "மண்புழுக்கள்" (நாவல், 2006).

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • "இரைகள்" சிறுகதைக்காகத் தமிழகத்தின் குமுதம் இதழின் சிறுகதைப் போட்டியில் (1977) முதல் பரிசு இக்கதை தமிழகத்தின் இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரச் சிறந்த சிறுகதையாகவும் (நவம்பர் 1977) தேர்வு பெற்று பின்னர் தொகுப்பில் இடம் பெற்றது.
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை பவுன் பரிசுகள்
  • செம்பருத்தி இதழின் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு (2002).
  • 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது "மண்புழுக்கள்" நாவல் முதல் பரிசு பெற்றது.
  • 2017ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதைப் பெறுகிறார்[1].

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விஷ்ணுபுரம்விருது விழா 2017". பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._முத்துசாமி&oldid=3244880" இலிருந்து மீள்விக்கப்பட்டது