விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்டு 17, 2011
Appearance
ஆகாயகங்கை அருவி தமிழ் நாட்டில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீசுவரர் கோவிலுக்கு அருகில் இந்த அருவி உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது. படத்தில் அருவியின் முழுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. |