மனதுருக்கம் இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனதுருக்கம் இலங்கை 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் ஒரு இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இலங்கையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களிற்கும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் வகையில் நடத்தப்படும் தொண்டு நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள் -

  • விதவைப் பெண்களிற்கு மாதாந்த உதவித்தொகை.
  • அங்கவீனர்|அங்கவீனர்களுக்கான மாதாந்த உதவித்தொகை.
  • ஏழை மாணவர்களுக்கான கல்விச் செலவு.
  • தங்குமிட வசதியற்றோரிற்கு இருப்பிட வசதி செய்து கொடுத்தல்.
  • குடிநீர் வசதி - குழாய்க்கிணறு போன்றவற்றை அமத்துக் கொடுத்தல்.
  • விவசாய உபகரணங்கள், மீன்பிடி உபகரணங்கள், தையல் இயந்திரம், துவிச்சக்கரவண்டி மேலும் உணவு, உடை போன்ற அத்தியாவசிய உதவிகள் போன்றனவற்றையும் வழங்குதல்.
  • அங்கத்தவர் காணாமல் வறுமைப்பட்ட குடும்பத்திற்கு உதவி வழங்குதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனதுருக்கம்_இலங்கை&oldid=1180727" இலிருந்து மீள்விக்கப்பட்டது