தமிழ் இலக்கிய வரலாறு (சி. பாலசுப்பிரமணியன் நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கிய வரலாறு
நூல் பெயர்:தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர்(கள்):சி. பாலசுப்பிரமணியன்
வகை:மொழி
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 029
மொழி:தமிழ்
பக்கங்கள்:408
பதிப்பகர்:நறுமலர்ப்பதிப்பகம்
பதிப்பு:21ஆம் பதிப்பு
1992

தமிழ் இலக்கிய வரலாறு என்பது சி. பாலசுப்பிரமணியன் என்பவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தினை வரலாற்று ரீதியாக ஆராயும் நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூல் பழமையும் சிறப்பும், சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் என்ற நிலையில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்கிறது. இந்நூல் மு. வரதராசனின் அணிந்துரையைக் கொண்டுள்ளது.

பிற்சேர்க்கை[தொகு]

நூலின் பிற்சேர்க்கையாக ஐரோப்பியர் வருகை, அச்சு இயந்திரத்தின் தோற்றம், இந்திய நாட்டின் விடுதலை இயக்கமும் தமிழ்நாட்டில் அதன் செல்வாக்கும், சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள், வினாத்தாள்கள் போன்றவை அமைந்துள்ளன.

உசாத்துணை[தொகு]

'தமிழ் இலக்கிய வரலாறு', நூல், (1992; நறுமலர்ப்பதிப்பகம், சென்னை 600 029, விற்பனை உரிமை பாரி நிலையம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. சி. பாலசுப்பிரமணியனின் நூல்களின் எண்மவடிவம்

வெளி இணைப்புகள்[தொகு]