மரீ பிரான்சுவா சாடி கார்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெஞ்சு இயற்பியலாளர் பற்றி அறிய சாடி கார்னோ கட்டுரையைப் பார்க்கவும்.

மரீ பிரான்சுவா சாடி கார்னோ
Marie François Sadi Carnot
பிரெஞ்சுக் குடியரசின் 5வது அதிபர்
அண்டோராவின் இளவரசர்
பதவியில்
டிசம்பர் 3, 1887 – ஜூன் 25, 1894
முன்னையவர்ஜூல்ஸ் கிறேவி
பின்னவர்சான் காசிமிர்-பெரேயர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1837-08-11)ஆகத்து 11, 1837
பிரான்ஸ்
இறப்புசூன் 25, 1894(1894-06-25) (அகவை 56)
லீயோன், பிரான்ஸ்
தேசியம்பிரெஞ்சு
அரசியல் கட்சிஇடதுசாரி ரிப்பப்ளிக்கன்

மரீ பிரான்சுவா சாடி கார்னோ (Marie François Sadi Carnot; ஆகஸ்ட் 11, 1837ஜூன் 25, 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசின் நான்காம் அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலை செய்யப்படும் வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார்.

ஜூன் 24, 1894 இல் லியோன் என்ற இடத்தில் ஒரு பொது மேடையில் உரையாற்றும் போது "சான்டெ கசேரியோ" என்ற இத்தாலிய அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகாயமடைந்து அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]