கியூசெப்பே பியாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூசெப்பே பியாசி
கியூசெப்பே பியாசி
Giuseppe Piazzi
பிறப்பு(1746-07-16)16 சூலை 1746
வல்தெலினாவின் பொந்தே, இத்தாலி
இறப்பு22 சூலை 1826(1826-07-22) (அகவை 80)
நேபுள்சு, இத்தாலி
தேசியம்இத்தாலியர்
துறைவானியல்
விருதுகள்இலாலண்டே பரிசு (1803)

கியூசெப்பே பியாசி (Giuseppe Piazzi) (16 ஜூலை 1746 - 22 ஜூலை 1826)ஓர் இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியாரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் வால்தெல்லினாவில் உள்ல பொந்தேவில் பிரந்தார்; நேப்புள்சில் இறந்தார். இவர் பலெர்மோவில் ஒரு வான்காணகத்தை நிறுவினார். இது இத்தாலி மொழியில் Osservatorio Astronomico di Palermo – Giuseppe S. Vaiana என அழைக்கப்படுகிறது.[1] இவரது குறிப்பிடத் தக்க கண்டுபிடிப்பு, சீரெசு கோள்குறளியைக் கண்டுபிடித்த்தாகும்.

இளமை[தொகு]

இறந்த பின் தகைமைகள்[தொகு]

வில்லியம் என்றி சுமித் எனும் வானியலாளர், வானியலாளராகிய தன் மகனுக்கு இவரது நினைவாக சார்லசு பியாசி சுமித் எனப் பெயர் இட்டுள்ளார். 1871 இல் கான்சுடாண்டினோ கார்டி வடித்த பியாசியின் சிலை இவரது பிறந்த இடமான பொந்தேவில் உள்ள முதன்மை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. 1923 இல் 1000 ஆவது குறுங்கோள் 1000 பியாசியா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2] நிலாவின் பியாசிக் குழிப்பள்ளம் 1935 இல் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் அபுள் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்த சீரெசுவின் மொத்தல் குழிப்பள்ளம் பியாசி எனப் பெயர் இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giuseppe Piazzi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூசெப்பே_பியாசி&oldid=3366083" இலிருந்து மீள்விக்கப்பட்டது