கைக்கிளை (சிற்றிலக்கியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைக்கிளை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஒருதலைக் காமம்|ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தங்களால் கூறுவது கைக்கிளை என்பது இலக்கணம்[1]. கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், ஒரு தலைக் காமம் தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.

இலக்கியம்[தொகு]

  • விக்கிமூலம் பகுதியில் காணப்படும் ஐந்து கொச்சகப் பாடல்கள் கைக்கிளை இலக்கியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
  • விக்கிமூலம் பகுதியில் காளமேகப் புலவர் பாடியனவாக வரும் ஐந்து கொச்சகப் பாடல்களும் 'கைக்கிளை' சிற்றிலக்கியத்துக்கு மற்றோர் எடுத்துக்காட்டாகும்.

வகைகள்[தொகு]

  • இது ஐந்து விருத்தங்களைக் கொண்டிருக்கும். [2]
  • 60 வெண்பாக்களாலும் இது அமையும். [3]
  • கைக்கிளை மாலை எனவும் இது கூறப்படும். [4]

குறிப்புகள்[தொகு]

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827
  2. ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்
    காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109)
  3. இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு
    பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110)
  4. காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - பிரபந்த தீபிகை -30

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]