கலைவல்லவராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைவல்லவராயன் என்பவர் கொங்கு தேச ராஜாக்கள் என்னும் புராண நூலில் கூறப்படும் ரெட்டிவம்சத்தின் நான்காம் அரசராவார்.[1]

ஸ்கந்தபுரம்[தொகு]

கதையின் படி இவனும் தன் தந்தையைப் போல் கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததைப் போல இவரும் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், கலைகளில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அறியமுடிகிறது.[2]

சான்றாவணம்[தொகு]

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-

ஆதாரங்கள்[தொகு]

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைவல்லவராயன்&oldid=2388507" இலிருந்து மீள்விக்கப்பட்டது