வடலி வெளியீடு
வடலி வெளியீடு இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட ஒரு வெளியீட்டு நிறுவனம். புத்தகங்கள், ஒலிப்புத்தகங்கள் ஆவணங்கள், குறும்படங்கள் ஆகியவற்றை வெளியிடுகிறது. தமிழில் படைப்பார்வம் வெளியீட்டார்வம் மிக்க சில இளைய நண்பர்களின் கூட்டு முயற்சியில் வடலி செயற்படுகிறது. வடலி வெளியீட்டினர் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை பரவலாக அறிமுகம் செய்யும் நோக்கில் கடந்த 2009 ம் ஆண்டு தொடங்கி ஈழத்துப் படைப்பாளிகளின் புத்தகங்களை வெளியிட்டும் விநியோகித்தும் தயாரித்தும் வருகின்றனர்.
வெளியீடுகள்[தொகு]
சிறுகதைகள்[தொகு]
- மரணத்தின் வாசனை -த.அகிலன்
- தேவதைகளின் தீட்டுத் துணி யோ.கர்ணன்
- கடவுளின் மரணம் - கருணை ரவி
- சேகுவேரா இருந்த வீடு - யோ.கர்ணன்
நாவல்[தொகு]
- கரையைத் தேடும் கட்டுமரங்கள் கே. எஸ். பாலச்சந்திரன்
கவிதைகள்[தொகு]
- அபராதி -ஃபஹீமா ஜஹான்
- ஒலிக்காத இளவேனில் (ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு) -தொகுப்பாளர்கள் - பிரதீபா கனகா தில்லைநாதன் , தான்யா தில்லைநாதன்
- அடையாளமற்றிருத்தல் - சம்பூர் வதனரூபன்
- நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை - மயூமனோ
பயணக்கட்டுரை[தொகு]
- கம்போடியா இந்தியத் தொன்மங்களை நோக்கி கானாபிரபா
உரையாடல் தொகுப்பு[தொகு]
- கொலைநிலம் - தியாகு ஷோபா சக்தி
கட்டுரைகள்[தொகு]
- மெல்லச் சுழலுது காலம் - இரா.செல்வராசு
- ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? - கலையரசன்