விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 27, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

விவிலிய இறை ஏவுதல் என்பது கிறித்தவர்களின் திருநூலாகிய விவிலியம் கடவுளிடமிருந்து வந்தது என்றும், அதை விவிலிய பாடத்திலிருந்தும், கிறித்தவ மரபிலிருந்தும், திருச்சபைப் போதனையிலிருந்தும் நிரூபிக்க இயலும் என்றும் கூறுகின்ற இறையியல் கொள்கை ஆகும். இக்கொள்கை இரு உண்மைகளை வலியுறுத்துவதற்காக எழுந்தது. அவை: விவிலியத்தில் அடங்கியுள்ள நூல்கள் இலக்கியம் என்னும் அடிப்படையில் இலக்கிய ஆய்வுக்கும் மொழி ஆய்வுக்கும் உட்பட்டவை, விவிலியம் வெறுமனே ஓர் இலக்கியத் தொகுப்பு மட்டுமல்ல; அது கடவுள் மனிதருக்கு வழங்கிய மீட்புச் செய்தியையும் உள்ளடக்கி அமைந்த இலக்கியப் படைப்பாக உள்ளது. எனவேதான், விவிலியம் "மனித மொழியில் அமைந்த இறைவாக்கு" என்று அழைக்கப்படுகிறது. படத்தில் உள்ளது மத்தேயு நற்செய்தி ஆசிரியருக்கு வானதூதர் வழி இறை ஏவுதல் கிடைத்தல். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). ஒல்லாந்து.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்