திருவாலியமுதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாலியமுதனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.

பிறப்பு[தொகு]

இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகிலுள்ள திருவாலிய நாட்டின் தலைநகர் திருவாலி நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடத்து அன்பு பூண்ட காரணத்தினால் பெற்றோர்கள் இவருக்கு திருவாலியிலுள்ள திருமாலின் பெயராகிய அமுதன் என்பதை இணைத்து திருவாலியமுதன் என்று பெயரிட்டனர்.[1]

சிவன்மீது பற்று[தொகு]

வைணவ குலத்தில் தோன்றினாலும் சிவபிரானிடம் அன்பு கொண்டு சிவனடியாராக திகழ்ந்தார். சிதம்பரம் நடராசப் பெருமானை தம் குலதெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் திழைத்தார்.[1] இதன் காரணமாக நடராசப் பெருமான் மீது திருவிசைப்பா பதிகங்களைப் பாடியருளினார்.

காலம்[தொகு]

இவரது காலம் 10 ஆம் நூற்றாண்டு. திருவாலி அமுதனார் திருவிசைப்பா பஞ்சகம், நட்டராகம், இந்தளம் ஆகிய மூன்று பண்களில் அமைந்து நான்கு பதிகங்களாய் 42 பாடல்களைக் கொண்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 340. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாலியமுதனார்&oldid=2718255" இலிருந்து மீள்விக்கப்பட்டது