வெ. சுகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெ. சுகுமார் மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'அக்கினி' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1976 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையிலும் பத்திரிகைத்துறையிலும் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, நாவல், செய்திக் கட்டுரைகள், ஆன்மீகம், அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவருடைய 'அக்கினி கேள்வி பதில்கள்' பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

நூல்கள்[தொகு]

  • "பட்டுப் புழுக்கள்" (நாவல்)
  • "கனா மகுடங்கள்" (புதுக் கவிதைகள்)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._சுகுமார்&oldid=3229147" இலிருந்து மீள்விக்கப்பட்டது