வி. கு. சுப்புராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. கு. சுப்புராசு (V.K. Subburaj) தமிழ்நாட்டரசின் சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் ஆவார்.

இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள நாட்டாபட்டி எனும் ஒரு சிற்றூர் ஆகும். இவரது தந்தை குமாரசாமி அய்யா தன் மகன்கள் நன்றாக படிக்க வேண்டும் என எண்ணி திருமங்கலத்தில் உள்ள பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு உணவு விடுதியில் தங்கிப் படிக்கும் படி ஏற்பாடு செய்தார். படிப்பில் நன்மாணாக்கராய்த் திகழ்ந்த சுப்புராசு வேளாண்மைப் படிப்பில் பட்டப் படிப்பு முடித்து இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்வானார்.

சுரா புத்தக வெளியீட்டாளர்கள் எனும்‌ பெயரில் மலிவு விலையில் பள்ளி மாணவர்கள், போட்டி‌த் தேர்வு எழுதுவோர் ஆகியோருக்குத் ‌தேவையான புத்தகங்களை வெளியிட்டும் வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கு._சுப்புராசு&oldid=788786" இலிருந்து மீள்விக்கப்பட்டது