வரதராஜ பெருமாள் கோவில், சூளகிரி
வரதராஜ பெருமாள் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | வரதராஜ பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருட்டிணகிரி |
அமைவு: | சூளகிரி |
ஆள்கூறுகள்: | 12°39′50″N 78°00′43″E / 12.664°N 78.012°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரசன்ன வரதராஜ பெருமாள் (விஷ்ணு) பெருந்தேவி மகாலட்சுமி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | துவாபர யுகம் |
அமைத்தவர்: | அருச்சுனன், பிற்காலச் சோழர், கிருஷ்ணதேவராயர், போசளர், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள். |
இணையதளம்: | http://srivaradarajaperumaltemple.wordpress.com |
வரதராஜ பெருமாள் கோவில்,சூளகிரி (Varadaraja Perumal Temple, Shoolagiri) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள பழமையான விஷ்ணு கோவில் ஆகும்.[1][2][3][4][5] இதன் கர்ப்பக்கிரகம் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. இகோவிலின் மண்டபம் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பின்னர் ஹொய்சால மன்னர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்டது.
விளக்கம்[தொகு]
சூளகிரி மலை திரிசூலத்தின் வடிவில் இருப்பதால் இந்த ஊர்சூளகிரி (சூலகிரி) என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு[தொகு]
இக்கோவிலில் வரதராஜ பெருமாள் மேற்கு பார்த்துள்ளார். பெருந்தேவி மகாலட்சுமி தாயார் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உத்தராயண காலத்தில் (தை - ஆடி) சூரிய அஸ்தமனத்தின் போது சூரியக் கதிர்கள் பெருமாளின் காலடியில் விழுகிறது.
விழா[தொகு]
ஒவ்வொரு ஆண்டும் மே 21, வரதராஜ பெருமாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது சிறப்பு பூஜைகள், யாகம் மற்றும் கல்யாண உற்சவம் போன்றவை அச்சமயத்தில் கோவிலில் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியின்போது கருடசேவை வெகு விமரிசையாக நடைபெறும்.
கோவில்நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Vararadaraja Perumal Temple - Dinamalar".
- ↑ "Shoolagiri Varadaraja perumal temple : Tamil".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Vararadaraja Perumal Temple of Shoolagiri : Tamil".
- ↑ "Vararadaraja Perumal Temple - Shoolagiri: Temples in Krishnagiri District: Tamil".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Old Temples in India". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.