மு. சிவலிங்கம் (எழுத்தாளர்)
மு. சிவலிங்கம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்த ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் எழுதிய “Ignited Minds" எனும் ஆங்கில நூலினைத் தமிழாக்கம் செய்து எழுதியுள்ளார். இவர் எழுதிய "எழுச்சி தீபங்கள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. எழுத்தாளரும், மார்க்சிய நூல்களின் மொழி பெயர்ப்பாளருமான தோழர் மு. சிவலிங்கம் சென்னையில் 13.02.2024 அன்று மாரடைப்பால் காலமானார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "எழுத்தாளர் மு. சிவலிங்கம் மறைவு; சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல்!". தீக்கதிர். https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/comrade-m.-sivalingam,-translator-of-marxist-texts,-passed-away. பார்த்த நாள்: 1 May 2024.