முகமது சா (சையிது வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது சா
சுல்தான்
முகமது சா
27வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்1434 – 1445
முன்னையவர்முபாரக் சா
பின்னையவர்ஆலம் சா
பிறப்புஅறியப்படவில்லை
தில்லி
இறப்பு1445
அரசமரபுசையிது வம்சம்
மதம்இசுலாம்

முகமது சா ( ஆ. 1434–1445 ) தில்லி சுல்தானகத்தை ஆண்ட சையிது வம்சத்தின் மூன்றாவது மன்னர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் தனது மாமா முபாரக் சா என்பவருக்குப் பிறகு அரியணை ஏறினார். [1] முகமது சா மற்றும் அவருக்குப் பின் வந்த அவரது மகன் ஆலம் சா இருவரும் லௌதி வம்சத்தால் மாற்றப்பட்டனர். முகம்மது சா தனது ஆட்சியை பெரும்பாலும் வேட்டையாடுவதிலேயே கழித்தார். மேலும் இவர் அதிக மது அருந்தியதால் 1445 இல் இறந்தார். [2]

முகமது சாவின் கல்லறை புது தில்லியின் லோதி தோட்டங்களில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jackson 2003, ப. 322.
  2. EB.
  • Jackson, Peter (2003). The Delhi Sultanate : a political and military history (1st ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521543293.
  • "Sayyid dynasty". Encyclopedia Britannica (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சா_(சையிது_வம்சம்)&oldid=3834012" இலிருந்து மீள்விக்கப்பட்டது