மகட்பாற்காஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களில் காணப்படும் பொருள் அகத்திணை என்றும், புறத்திணை என்றும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அகத்திணை மனத்திற்குத் தெரியும் ஆண்-பெண் உறவு பற்றியது. மறைவின்றி ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் புறத்திணை.

தொல்காப்பியம் புறத்திணையில் ஏழு பகுப்புகளை வைத்துள்ளது. அவற்றில் ஒன்று காஞ்சித்திணை. நிலையில்லாத உலகில் நிகழ்வனவற்றைக் கூறுவது காஞ்சித்திணை [1]

அதன் துறைகள் பலவற்றுள் மகட்பாற்காஞ்சி என்பது ஒன்று. 'நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பால்' என்று தொல்காப்பியம் அதனைக் குறிப்பிடுகிறது. அரசனுக்குப் பெண் தர அஞ்சும் முதுகுடியைப் பெருமைப்படுத்திக் கூறுவது மகட்பாற்காஞ்சி. [2]

மகட்பாற்காஞ்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் 20 உள்ளன. [3] இது பொதுவியல் என்னும் பகுதியில் வரும் துறை.

தொல்காப்பியம் இப் பொருள் மேல் வரும் பாடல்களைக் காஞ்சித்திணையில் அடக்கிக் காட்டுகிறது.[4] புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணமும் தொல்காப்பிய வழியில் செல்கிறது.[5]

புறநானூறு[தொகு]

  • விரும்பிய வேந்தன் பெருஞ்சினத்தன். தந்தையும் பெண்ணைத் தரமாட்டான். தாய் ஊருக்குப் பகை உண்டாக்கும் இந்தப் பெண்ணை வளர்த்திருக்கிறாளே! [6]
  • இவள் பாரி நாட்டுப் பனிச்சுனை போல அரியள். இவளை அமுக்கப்போவது யார்? [7]
  • வேம்பு, ஆர், போந்தை அணிந்த வேந்தர் வரினும் மகளைத் தரமாட்டான். [8]
  • வேந்தர் நெஞ்சம் கொண்டு ஒளித்தாள். [9]
  • ஆனிரை மீட்கும் கரந்தை வீரனுக்கு என வரைந்து சொல்லிவைக்கப்பட்டிருந்தாள். [10]
  • இவளால் இந்த ஊர் யானை கலக்கிய குளம் போல் ஆகிவிடுமோ? [11]
  • மயிலைக் கண்ணி பெருந்தோள் குறுமகள் யார் மகள்? [12]
  • கடல் வணிகத்தால் செல்வம் மிக்க முசிறி அளவு பொருள் தரினும் பெண்ணைத் தரமாட்டான். [13]
  • காஞ்சிப் பனிமுறி சூடியவள். [14]
  • வந்தோர் பலரே வம்ப வேந்தர். [15]
  • இவள் நலன் ஊரைப் பாழாக்கும். [16]
  • அகுதை கூடல் நகரம் போல் கூந்தல் உடையவள். [17]
  • தாய் இவளைப் பெறாமல் இருந்தால் இந்த ஊருக்குத் துன்பமை இல்லையே. [18]
  • மரத்தில் பற்றிய சிறு தீ போல இவள் ஊரைச் சுடுகிறாள். [19]
  • வேந்தர் இவளை ஆகத்துச் சுணங்கை அணைத்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள் போல் இருக்கிறதே! [20]
  • கடல் கண்டு அன்ன படை சூழ்ந்திருக்கிறதே! [21]
  • உறையூர் போன்ற செல்வம் தந்தாலும் இவளைத் தந்தை தரமாட்டான். [22]
  • வல்வில் தொல்குடி மன்ன்ன் மகள். [23]
  • வேல் வீரர் வெள்ளம் போல் குவிந்துள்ளனரே! [24]
  • இவளால் ஊரே சுடுகாடாகிவிட்டது. [25]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் 1024
  2. தொல்காப்பியம் 1025
  3. புறநானூறு 336, 337, 338, 339, 340, 341, 342, 343, 344, 345, 346, 347, 348, 349, 350, 351, 352, 353, 354, 356
  4. நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
    மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் (தொல்காப்பியம், புறத்திணையியல் 19)
  5. ஏந்திழையாள் தருக என்னும்
    வேந்தனொடு வேறு நின்றன்று. (புறப்பொருள் வெண்பாமாலை, காஞ்சித்திணை, 84
  6. புறநானூறு 336,
  7. புறநானூறு 337,
  8. புறநானூறு 338,
  9. புறநானூறு 339,
  10. புறநானூறு 340,
  11. புறநானூறு 341,
  12. புறநானூறு 342,
  13. புறநானூறு 343,
  14. புறநானூறு 344,
  15. புறநானூறு 345,
  16. புறநானூறு 346,
  17. புறநானூறு 347,
  18. புறநானூறு 348,
  19. புறநானூறு 349,
  20. புறநானூறு 350,
  21. புறநானூறு 351,
  22. புறநானூறு 352,
  23. புறநானூறு 353,
  24. புறநானூறு 354,
  25. புறநானூறு 356
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகட்பாற்காஞ்சி&oldid=1268725" இலிருந்து மீள்விக்கப்பட்டது