பேச்சு:நந்திக் கலம்பகம்
நந்திக் கலம்பகத்தால் அறியப்படும் நந்தி வர்மன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வர்மனே ஆவான்.நந்திக் கலம்பகப் பாடல்களிலேயே இச்செய்தி குறிப்பிடப்படுகிறது. எனவே இரண்டாம் நந்தி வர்மன் என்பதைத் திருத்தி உள்ளேன்.
சான்று
நந்திகலம்பகம்
'தெள்ளாறில் செருவென்ற செங்கோல் நந்தி' - பாடல் 49
'தெள்ளாற்றில் வென்ற கோன்' - பாடல் 52
'சினக்கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி'.-- பாடல் 53
'மூண்டார் தெள்ளாற்று உள்ளே மூழ்க முனிவு ஆறி,மீண்டான் நந்திக்கு '-- படல் 71
'நெடுந் தெள்ளாற்றில் வட்ட வெஞ்சிலை நாண் இடக் கழித்தவன்' -- பாடல் 75