பெ. கோவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. கோவிந்தன் (பிறப்பு: மே 3 1940) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பெ. கோ. மலையரசன் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இவர் விற்பனை உதவியாலாளராக பணியாற்றி வருகின்றார். நாடறிந்த நல்ல கவிஞர். பல வானொலி, மேடைக் கவியரங்குகளில் பங்கு பற்றியுமுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960-ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைகள், கட்டுரைகளை எழுதிவருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும், தமிழ் நாட்டில் "தென்மொழி", "முல்லைச்சரம்" முதலிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்[தொகு]

  • "நிலைபெற்ற தலைவன்" (அண்ணா பற்றிய கவிதைகள், 1969)
  • "பாவாணர் பிள்ளைத் தமிழ்" (1989)
  • "பாய்புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ்" (2003)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • சிங்கப்பூரில் நடந்த தென்கிழக்காசியக் கவிதை மஞ்சரி கவிதைப் போட்டியில் முதல் பரிசு (1988);
  • பாரதிதாசன் இயக்கத்தின் குறுங்காவியப் போட்டியில் இரண்டாம் பரிசு (1989);
  • அன்பானந்தன் இலக்கிய வாரியம், தமிழர் திருநாள் அமைப்புக்கள் போன்றவற்றில் பல பரிசுகள்.
  • "கழகக் கவிஞர்"விருது - மலேசியத் திராவிடர் கழகம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._கோவிந்தன்&oldid=3222299" இலிருந்து மீள்விக்கப்பட்டது