புனலும் மணலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனலும் மணலும் ஆ. மாதவன் எழுதிய முதல் தமிழ் நாவல். 1972ல் வெளிவந்தது. காலச்சுவடு பதிப்பகம் ”காலச்சுவடு கிளாசிக்ஸ்” வரிசையில் இதை வெளியிட்டிருக்கிறது.

இந்நாவல் திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மணல் அள்ளி வாழும் மக்களைப்பற்றிய கதை. பாச்சி என்ற மையக்கதாபாத்திரம் அழகற்ற குரூபி. அவளை அவள் தந்தை வெறுக்கிறார். அவள் அவரை நேசித்து பாதுகாத்து வந்தபோதிலும்கூட வெறுப்பு கூடிக்கூடி வருகிறது. காரணம் அவளுடைய அழகின்மைதான். கடைசியில் அவள் கரமனை ஆற்றில் மூழ்கிச்சாக தந்தையே காரணமாக அமைகிறார். வாழ்க்கையை உள்ளபடியே சொல்ல முயலும் இயல்புவாத அழகியல் கொண்ட நாவல். காமத்தையும் வன்முறையையும் அப்படியே சொல்கிறது. நீதி ஒழுக்கம் என எதையும் முன்வைப்பதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனலும்_மணலும்&oldid=656458" இலிருந்து மீள்விக்கப்பட்டது