பிரிதிவி கொங்கணி மகாதிராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரிதிவி கொங்கணி மகாதிராயன் கங்க வம்சத்தின் 15வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூற சான்றுகள் இல்லை. இவர் சிவகாமராயனின் பேரன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. இவனுக்குப் பின் வாரிசுகள் இல்லாது போயிற்று. [1]

தலவனபுரம்[தொகு]

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் பல தேச மன்னர்களை வென்றும் அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும் அறியமுடிகிறது.[2]

ஆட்சிப் பங்கீடு[தொகு]

பிரிதிவி கொங்கணி மகாதிராயன் தனது சேனாதிபதியாய் இருந்த ஸ்ரீ புருஷராயனுக்கு விஜயகந்தபுரத்தை தலைநகராக அமைத்து 12 கிராமங்களைக் கொடுத்தான். இவன் சாலிவாகன சகம் வருடம் 1, அஷ்டவுஷ்ட யோத்திர சதம் 968 பிரபவ வருடம் 1 சித்திரை மாதம் சுக்கிலபட்சம் பஞ்சமியிலே அசுவனி நட்சத்திரத்திலே, சோமவாரத்தில் ஸ்ரீ புருஷராயனுக்கு இராஜ்ஜிய தானம் இதற்கு சாட்சி, என் குலத்திலே பிறந்திருக்கிற மந்திரி, ராஜகுமாரர்கள் என்றும், தெய்வ சாட்சி மல்லிகார்ச்சுன சுவாமி என்று சாசனம் உள்ளது. கணவாய் கிராமங்கள் என்பது தற்கால ஹாசனூர், கஜ்ஜலு கட்டி மலைப் பகுதிகளாகும்.[3]

சான்றாவணம்[தொகு]

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-106)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-93-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

ஆதாரங்கள்[தொகு]

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai