பால்கா கல்ஜி
மாலிக் பால்கா கல்ஜி (Malik Balka Khalji) ( 1230 – தில்லி சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசின் கீழ் 1231 ஆம் ஆண்டு வரை வங்காளத்தின் ஆளுநராக இருந்தார்.[1]
வரலாறு[தொகு]
பால்கா அலி ஷேர் கல்ஜியின் மகனாவார்.[2] அலாவுதீன் தௌலத் ஷா கல்ஜியின் மரணத்திற்குப் பிறகு, பால்கா வங்காளத்தின் அரியணையைக் கைப்பற்றினார். மாலிக் பால்கா தன்னை வங்காளத்தின் சுதந்திர ஆட்சியாளராகக் காட்டிக் கொண்டார். இதனால் கோபமடைந்த சுல்தான் இல்த்துத்மிசு 1231 இல் வங்காளத்தின் மீது படையெடுத்தார்.[1] பால்கா பின்னர் தோற்கடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதன் மூலம்வங்காளத்தின் கல்ஜி வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதனையும் காண்க =[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Ahmed, ABM Shamsuddin (2012). "Balka Khalji, Ikhtiyaruddin". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Balka_Khalji,_Ikhtiyaruddin.
- ↑ Far East Kingdoms : South Asia