பானுகுப்தர் (Bhanugupta) பிற்கால குப்த ஆட்சியாளர்களில் மிகவும் குறைவாக அறியப்பட்டவர். பானுகுப்தர் கி பி 550-இல் ஹூணர்களின் தலைவர் தோரமணனை வென்றார்.[1][2]மத்தியப் பிரதேசத்தின்ஏரணில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் பானுகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு கிடைக்கப் பெறுகிறது. பானுகுப்தரின் காலத்தில் குப்தப் பேரரசின் மேற்கு பகுதிகள் ஹூணர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாயின.