பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள் எனப்படுபவை பராந்தக வீரநாராயணன் (கிபி 887) என்னும் பாண்டிய அரசனால் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்

வடிவமைப்பு[தொகு]

"இச் செப்பேடு, முனைகள் தட்டிச் சமன்படுத்திப் பிணைக்கப்பெற்ற வளையத்தில் கோக்கப்பெற்றுள்ள ஏழு இதழ்களைக் கொண்டுள்ளது. இதழ்கள் 18 அங்குல நீளமும் 5 1/2 அங்குல அகலமும் உடையவை. முத்திரை. செப்பேடுகளுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. முத்திரையில் மீனிரட்டை, புலி ஆகிய இரண்டு சின்ங்கள் கீழே ஒரு உருவில் பொறிக்கப்பட்டுள்ளது."[1]

மொழி[தொகு]

இச் செப்பேட்டின் 238 வரிகளை உடையது. முதல் 65 வரிகள் வடமொழில் உள்ளன. கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. 173 வரிகள் தமிழில் உள்ளன. இவை தமிழ் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன.

செய்தி[தொகு]

பல்வேறு இந்துப் புராணக் கதைகளும் வரலாற்றுச் செய்திகளும் இந்தச் செய்ப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. வே. மகாதேவன். (2009). கல்வெட்டுக்கள்: வினா-விடை விளக்கம். சென்னை: சேகர் பதிப்பகம்.

உசாத்துணைகள்[தொகு]

  • வே. மகாதேவன். (2009). கல்வெட்டுக்கள்: வினா-விடை விளக்கம். சென்னை: சேகர் பதிப்பகம்.