பாகவி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாகவி இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1952ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி ரஹ்மதுல்லாஹ் மஆலி பாகவி சாகிப்.

இவர் ஜெமினி படத்தயாரிப்பு நிறுவனக் கதைத்துறையில் பணியாற்றியுள்ளார். பல உருது நூல்களை தமிழில் மொழிபெயர்த்துமுள்ளார் என அறியமுடிகின்றது. இவர் ஏற்கனவே பத்ஹுல் இஸ்லாம் எனும் சஞ்சிகையிலும் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்.

பொருள்[தொகு]

'பாகவி' என்ற அரபுப் பதம் 'நிலையானது' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. இஸ்லாமிய அடிப்படையில் எழக்கூடிய பிரச்சினைகளுக்கு விளக்கம் வழங்கும் ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பின்பு தேசிய உணர்வினை இந்திய மக்களிடம் ஏற்படுத்துவதற்கு இவ்விதழ் கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகவி_(சிற்றிதழ்)&oldid=736059" இலிருந்து மீள்விக்கப்பட்டது