பழனி சாக்கடை சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனி சாக்கடை சித்தர்
பிறப்புவட இந்தியா
தேசியம்இந்தியர்
முக்கிய ஆர்வங்கள்
சாக்கடை நீரைக் குடித்தல் மற்றும் அதில் குளித்தல்

சாக்கடை சித்தர் என்பவர் பழனி மலையின் அடிவாரமான அய்யம்புள்ளி பகுதியில் வாழ்ந்து மறைந்த சித்தராவார்.[1] இப்பெயரைக் கொண்டே பல்வேறு சித்தர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டம் குளித்தலை நகரிலும் சாக்கடை சித்தர் என்றொருவர் இருந்துள்ளார்.[2]

சாக்கடை சித்தரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் வடநாட்டிலிருந்து தனது 55 வயதில் பழநிக்கு வந்தார்.[3] பழநிமலையில் முருகன் கோயிலுக்கு செல்லுகின்ற அய்யம்புள்ளி சாலையில் சாக்கடை மேடையின் மீது கூடாரமிட்டு வாழ்ந்தார்.[3] சாக்கடை நீரைப் பகுவதையும், அதிலேயே குளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் சாக்கடை சித்தர் என பக்தர்கள் அழைத்தனர்.[3]

யாரிடமும் பேசாமல் இருப்பார். இவரை வழிபட்டால் நல்லது நடக்கும் என உள்ளூர் வெளியூர் பக்தர்கள் பலரும் வணங்கினர்.[3] உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார்.[3] இவர் 2016 ஆண்டு மே 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.[1]

ஊடகங்களில்[தொகு]

தமிழ் தொலைக்காட்சியான வேந்தர் தொலைக்காட்சியில் மூன்றாவது கண் என்ற தொடரின் 35 வது நிகழ்ச்சியில் இவரைப் பற்றிய செய்திகளுடன் நேரில் சென்று கண்ட நிருபரின் அனுபவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "பழனியில் சாக்கடை சித்தர் சித்தியானார்".
  2. "குளித்தலையில் "சாக்கடை சித்தர்' மரணம்".
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "பழநி "சாக்கடை சித்தர்' மருத்துவமனையில் அனுமதி".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_சாக்கடை_சித்தர்&oldid=3789485" இலிருந்து மீள்விக்கப்பட்டது