பயனர்:Babauever/சரஸ்வதி நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரஸ்வதி நதி (சமஸ்கிருதம்: [0] [1] பண்டைய இந்து நூல்களில் குறிப்பிடப்பட்ட முதன்மையான ரிக்வேத நதிகளில் ஒன்றாகும். ரிக்வேதத்தின் நாதிஸ்துதி பாடல் (10.75) சரஸ்வதி நதியைக் கிழக்கின் யமுனைக்கும் மேற்கின் சட்லெஜ்ஜிற்கும் இடையே குறிப்பிடுகிறது. பிற்கால வேத நூல்களான தாண்ட்ய மற்றும் ஜைமினிய பிராமாணாஸ் போன்றவையும், அதே போல மகாபாரதமும் சரஸ்வதி நதி பாலைவனத்தில் வறண்டு விட்டதாகக் குறிப்பிடுகின்றன. பெண் கடவுளான சரஸ்வதி இந் நதியை மூலாதாரமாகக் கொண்டே ஆளுருவாக்கம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் தனித்த அடையாளமும் பொருளும் உருவாக்கப்பட்டது.

வேத கால சரஸ்வதி நதியை காக்கர்-ஹக்ரா நதியுடன் அடையாளம் காண்பது என்பது கிறிஸ்டியன் லாசன்[1], மாக்ஸ் ம்யூலர்[2]மார்க் ஆரேல் ஸ்டீன், சி.எஃப். ஓல்தாம்[3]மற்றும் ஜேன் மகின்டோஷ்[4] ஆகியோரல் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பெயர் வரலாறு[தொகு]

[2]என்பது [3] இன் தேவி எனும் பெண் பால் பெயர் உரிச்சொல்லாகும் [3](அது ரிக்வேதத்தில்[4] தெய்வீகமான நீராதாரங்களின் காப்பாளரின் பெயராக ஏற்படுகிறது). அது ப்ரோட்டோ-இந்தோ-ஈரானியன் [5] மூலத்திலிருந்து "(பலவற்றிலிருந்து) திரட்டப்பட்டது எனும் பொருளில்" பெறப்பட்டதாகும் (அத்துடன் முன்னதாக PIE [5]).

சமஸ்கிருதத்தில் [7] " குட்டை, குளம் எனும் பொருளிலும், பெண் பால் சொல்லான [8] "தேங்கியுள்ள குட்டை, சகதி" எனும் பொருளிலும் காணப்படுகிறது.[9] கிரேக்கத்தின் [10] எனும் சொல்லின் "சகதி" என்பவற்றோடு உறவுள்ள ரிக்வேத வரையறை பெரும்பாலும் தேங்கியுள்ள நீரினையே குறிப்பிடுகிறது. மேலும், மேய்ர்ஹோஃபர் "ஓடுவது, பாய்வது"[12] எனும் பொருளுள்ள வேர்ச் சொற்களோடு[11] தொடர்பொன்றின் இல்லாமையைக் கருதுகிறார்.

[13] என்பது அவெஸ்தானின் ஹராக்ஸ்வைதியுடன் உறவுடையதாக உள்ளது. அது அவெஸ்தானின் இதிகாச உலக நதியான ஆரத்வி சுரா அனாஹிதாவை குறிப்பிடுவதாக ஊகிக்கப்படுகிறது[14]; அது ஏற்கனவேயுள்ள புரோட்டோ-இந்தோ-ஈரானிய பிரபஞ்சார்ந்த அல்லது மறைபொருளாக இருக்கும் மாயையான சரஸ்-விண்ட்-இஹ் நதியினைச் சுட்டலாம். வளரும் இளம் அவெஸ்தாவில் ஹராக்ஸ்வைதி நதிகளுடன் வளம் பெற்றப் பகுதியைக் கொண்டிருப்பதாகக் விவரிக்கப்படுவதோடு அடையாளப்படுத்தப்படுகிறது. அத்தோடு பழைய பெர்சிய மொழி உறவான ஹராக்குவதிஸ் என்பது ஹெல்மாண்ட் நதி அமைப்பின் பெயராகும். அது கிரேக்க அராகோசியாவின் மூலச் சொல்லாகும்.

ரிக்வேதத்தில்[தொகு]

ரிக்வேதத்தின் நான்காம் புத்தகம் தவிர பிற அனைத்திலும் சரஸ்வதி நதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கென்றே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களைக் கொண்ட நதி அது மட்டுமேயாகும்: அவை ரி.வே. 6.61, ரி.வே. 7.95 மற்றும் ரி.வே. 7.96 ஆகியனவாகும்.

புகழ்ச்சி[தொகு]

  • ரிக்வேதத்தில் சரஸ்வதி நதியானது அனைத்து நதிகளிலும் சிறப்பானது என்று தாராளமாகப் புகழப்படுகிறது. எடுத்துக் காட்டாக ரி.வே. 2.41.16 பாடலில் சரஸ்வதியானவள் அம்பிதமே நாதிதமே தேவிதமே சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறாள். அதற்கு "சிறந்த தாய், சிறந்த நதி, சிறந்த பெண் கடவுள்" எனப் பொருளாகும். புகழ்ச்சியான இதர செய்யுள்களாவன: ரி.வே. 6.61.8-13, ரி.வே. 7.96 மற்றும் ரி.வே. 10.17. சில பாடல்களில் சிந்து நதியானது சரஸ்வதி நதியை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது; இது குறிப்பாக நாதிஸ்துதி சூக்தத்தில் காணப்படுகிறது. ரி.வே. 8.26.18 வது பாடலில் வெண்மையாக 'தங்கச் சக்கரங்களுடன்' பாயும் சிந்து நதியே அதிகமாக அறிவிக்கப்படும் அல்லது நதிகளில் அதிகம் ஈர்ப்புடையது எனக் குறிப்பிடப்படுகிறது.
  • ரி.வே.7.95.2. மற்றும் இதர செய்யுள்கள் (எ.கா. ரி.வே. 8.21.18) சரஸ்வதி நதி "பாலையும் நெய்யையும்" பொழிவது பற்றி பேசுகிறது. "நதிகள் அடிக்கடி பசுக்களுக்கு ஒப்பாக ரிக்வேதத்தில் இடப்படுகிறது. எடுத்துக் காட்டாக ரி.வே.3.33.1 பாடலில்,
மகிழ்ச்சிமிக்க தாய் பசுக்கள் இரண்டு தங்களின் இளம் கன்றுகளை நக்கிக் கொடுப்பது போல்
விபாஸ் மற்றும் ஸ்துத்ரி ஆகிய இரண்டும் தங்களின் நீரோட்ட வேகத்தைக் குறைக்கின்றன.
  • சரஸ்வதி சப்தஹி சிந்துமாதா எனும் ரி.வே.7.36.6 பாடல் பிரபலமான மொழியாக்க வடிவத்தில் "ஏழாவது இடத்திலிருக்கும் சரஸ்வதி வெள்ளப் பெருக்குகளுக்கெல்லாம் தாய்" எனும் பொருள் விளக்கத்தைக் கொண்டுள்ளது.[15] அதே சமயம் இது சிந்துமாதாவிற்கு தத்புருஷ விளக்கத்தை எடுத்துத் தருகையில், சொல்லானது உண்மையில் ஒரு பஹூவ்ரீஹியாகும் (இவை சமஸ்கிருத இலக்கண வேற்றுமைகளின்படி அமைந்துள்ளன).[16].

நதி செல்லும் திசை[தொகு]

  • பிற்கால ரிக்வேத நாதிஸ்துதி ஸூக்தம் அனைத்து முக்கிய நதிகளை விவரமாய்ச் சொல்கிறது. கிழக்கின் கங்கையிலிருந்து மேற்கின் சிந்து வரை தெளிவான புவியியல் வரிசைப்படி சொல்கிறது. இங்கு (ரி.வே. 10.75.5) கங்கை, யமுனை, ஸரஸ்வதி மற்றும் ஷுதுத்ரி எனும் வரிசைமுறையானது ஸரஸ்வதியை யமுனைக்கும் ஷட்லெஜ்ஜிற்கும் இடையே பொருத்துகிறது. அது கக்கார் நதியினை (ஸரஸ்வதியாக) அடையாளப்படுத்துவதில் தொடர்ச்சியுடன் காணப்படுகிறது.
  • ரி.வே. 6.61 ரில் காணப்படும் செய்யுள்கள் ஸரஸ்வதி நதி மலைகளில் உருவாகிறது என்பதைச் சுட்டுகிறது. மலைகளின் முகடுகளில் அவள் (ஸரஸ்வதி) தனது "வலுவான அலைகளை வெடித்துச் சிதறச் செய்கிறாள்". மேலுள்ள விளக்கம் தற்காலத்தில் இமயமலையின் அடிவாரக் குன்றுகளிலுள்ள ஸரஸ்வதி (ஸர்ஸுதி) நதியினை போன்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறதா? என்றவாறான பொருள் விளக்க முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
  • ரி.வே. 3.23.4-ன் பாடல் ஸரஸ்வதி நதியை த்ருஷத்வதி நதியுடனும் அபயா நதியுடனும் இணைத்துக் கூறுகிறது. ரி.வே.6.52.6 ஸரஸ்வதி, நதிகளால் (சிந்துபி) பெருக்கமடைவதாக (பின்வாமனா) விவரிக்கிறது.
  • ரி.வே. 6.61.12-ம் செய்யுள் ஸரஸ்வதி நதியை ஐந்து இனங்களுடன் தொடர்புபடுத்துகிறது; மேலும் ரி.வே.7.95.6-ன் பாடல் பரவதர்கள் மற்றும் புரூஸ்களுடனும்; ரி.வே. 8.21.18 பாடல் ஸரஸ்வதி நதி செல்லும் திசையில் எண்ணற்ற சிற்றரசர்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறது.
சிட்ரா என்பவன் அரசனாவான், அவனும் அவனது மக்களுமே ஸரஸ்வதி நதியின் அருகில் வாழும் இதரர் ஆவர்.
  • ரி.வே. 7.95.1-2 பாடலில் ஸரஸ்வதி தற்போது பெருங்கடல் என வழக்கமாக மொழிபெயர்க்கப்படும் சொல்லான ஸமுத்திரத்தினை நோக்கிப் பாய்வதாக விவரிக்கப்படுகிறது.
இந்த நீரோட்டமான அலைகள் முன்னே வரும் ஸரஸ்வதி நமது உறுதியான பாதுகாப்பு, நமது இரும்பு கோட்டை (போன்றது).
தேரில் வீற்றிருப்பது போல வெள்ளமானது பாய்கிறது; பிற நதிகள் அனைத்தையும் கம்பீரத்திலும் வலிமையிலும் விஞ்சுகிறது.
மலையிலிருந்து கடலுக்கு செல்லும் திசையில் தூய்மையுடைய ஸ்ரஸ்வதி ஒரே திசையில் மட்டும் செல்வது கவனிக்கப்பட்டுள்ளது.
செல்வத்தையும் உலக படைப்புக்களையும் கருதி அவள் தனது பாலையும் கொழுப்பையும் நாஹூசாவிற்கு பாய்ச்சினாள்.

பெண் கடவுளராக சரஸ்வதி[தொகு]

ஓவியர் இராஜா இரவி வர்மா வரைந்த பெண் கடவுளரான சரஸ்வதியின் ஓவியம்

ரிக்வேதத்தில், சரஸ்வதி எனும் பெயர் ஏற்கனவே எப்போதும் நதியையும் அதன் தனித்த ஆளுருவாக்கத்தையும் தொடர்புபடுத்தாது; சில இடங்களில் பெண் கடவுளரான சரஸ்வதி நதியிலிருந்து பிரித்துக் காட்டப்படுகிறார்.

சரஸ்வதி நதி பிற்கால ரிக்வேதத்தின் புத்தகங்களில் (1 மற்றும் 10) 13 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மேற்குறிப்புகளில் இரண்டு மட்டுமே தெளிவாக நதியினைக் குறிக்கின்றன - ஒன்று பாடல் 10.64.9 சிந்து, சரஸ்வதி மற்றும் சரயூ ஆகிய முப்பெரும் ஆறுகளை உதவிக்கு அழைப்பது; மற்றது பாடல் 10.75.5 நாதிஸ்துதி சூக்தத்தின் புவியியல் பட்டியல் ஆகியனவாகும். இதர பாடல்கள் சரஸ்வதியை ஒரு பெண் கடவுளராக ஒரு குறிப்பிட்ட நதியினைத் நேரடியாகத் தொடர்புபடுத்தாமல் வணங்கி வேண்டிக் கொள்கின்றன. 10.30.12 ஆம் பாடலில் அவளது நதியின் பெண் கடவுள் எனும் மூலத் தோற்றமானது (அவளை) ஒரு பாடலில் தெய்வீகமான நீரோட்டத்திற்கு காக்கும் கடவுளாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை விளக்கச் செய்யலாம். 10.135.5 ஆம் பாடலில் இந்திரன் சோம பானத்தைக் குடிப்பது என்பது சரஸ்வதியால் புத்துணர்ச்சி அடைவது போல் விவரிக்கப்படுகிறது. 10.17 வணக்கப்பாடல்களில் சரஸ்வதியானவள் முன்னோர்கள் மற்றும் தற்போதைய தலைமுறையினரின் பெண் கடவுளாகவும் கூட உரைக்கிறது. 1.13, 1.89, 10.85, 10.66 மற்றும் 10.141 ஆகிய பாடல்களில் அவள் இதர ஆண் மற்றும் பெண் கடவுளர்களுடன் பட்டியலிடப்படுகிறாள்; ஆனால் நதிகளுடன் அல்ல. 10.65 பாடலில், அவள் புனித சிந்தனைகள் [19] மற்றும் தாராளப் பண்பு [20] ஆகிய இரண்டிற்கும் இணைத்து வணங்கப்படுகிறாள். அறிவு மற்றும் செழுமைக்கு ஆகியவற்றிற்கான பெண் கடவுளாக விளங்கும் அவளது தொடர்ச்சியான பங்கிற் வணங்கப்படுகிறாள்.

இதர வேதகால நூல்கள்[தொகு]

ரிக்வேத காலத்திற்குப் பிந்தைய நூல்களில் சரஸ்வதியின் மறைவு குறிப்பிடப்படுகிறது. சரஸ்வதியின் மூலத்தோற்றமும் கூட ப்ளாக்ஸா பிரஸ்ராவனா என அடையாளம் காணப்பட்டுள்ளது.[21][22]

யஜூர் வேதம்[தொகு]

யஜூர் வேதத்தின் (34.11) வாஜசனேயி-சம்ஹிதாவின் துணை அத்தியாயத்தில், சரஸ்வதி சிந்துவை தெளிவாகப் பொருள்படுத்தும் சூழலில் குறிப்பிடப்படுகிறது: "சரஸ்வதியை நோக்கி தங்களது வழியில் வேகமாக ஐந்து நதிகள் பாய்கின்றன; ஆனால் பின்னர் நிலத்தில் ஐந்து மடிப்புக்களோடு கூடிய சரஸ்வதி நதியாக ஆகின்றன".[23] இடைக்கால ஆய்வுரையாளரான உவாதாவிற்கு இணங்க, சரஸ்வதியின் ஐந்து கிளை நதிகள் பஞ்சாபின் ட்ரிஷத்வதி, சதுத்ரி (சட்லெஜ்), சந்த்ரபாகா (செனாப்), விபாஸா (பியாஸ்) மற்றும் ஐராவதி (ராவி) ஆகியனவாகும்.

பிரமாணங்கள்[தொகு]

சரஸ்வதியின் கீழ் புற நீரோட்டத்தின் மறைவு பற்றிய முதல் குறிப்பு பிரமாணங்களிலிருந்து பெறப்பட்டது. அத்தகைய பிரமாணங்கள் என்பவை வேதகால சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. எனினும் வேத சம்ஹிதங்களை விட பின்னர் வந்த காலத்தைக் கொண்டதாக அமைந்துள்ளன. ஜைமினிய பிரமாணங்கள் (2.297) சரஸ்வதியில் மூழ்கி எழுவது (உபமஜ்ஜனா) பற்றி பேசுகிறது. தாண்ட்ய பிரமாணம் அல்லது பஞ்சவிம்ச பிரமாணம் இதனை மறைதல் என்றழைக்கிறது (வினாசனம்). அதே நூல் (பாடல் 25.10.11-16) சரஸ்வதி நதி வளைந்து நெளிந்து செல்கிறதென்பதால் (குப்ஜிமதி) அது வளர்த்தெடுத்த சொர்க்கத்தை பேணி வளர்க்க இயலவில்லை.[24]. ப்ளாக்சா பிரஸ்ராவனா (தோன்றுமிடம்/நதியின் ஆதாரவளம்) சிவாலிக் மலைத் தொடரிலிலுள்ள நீரூற்றினைக் குறிக்கலாம். உற்பத்தியாகின்ற நீரூற்று மூலாதாரத்திற்கும் வினாசனத்திற்கும் (நதி மறையும் இடத்திற்கும்) ஆன தொலைவு 44 அஸ்வினா(க்கள்) எனக் கூறப்படுகிறது (இடையே பல நூறு மற்றும் 1600 மைல்கள் பரப்புள்ளன). (தாண்ட்யா பிரமாணம் 25.10.16; ஒப்பம் பஞ்சவிம்ச பிரமாணத்தில் 6.131.3 இல் கிடைக்கிறது.[25]

பின் வந்த வேதகாலம்[தொகு]

லாட்யாயனா ஸ்ரவுடசூத்ரா (10.15-19) வில் சரஸ்வதி நதியானது வினாசனா (மறையும் இடம்) வரை நிலையானதாக (வற்றாமல்) இருப்பதாகக் காணப்படுகிறது. அதன் மறைவிடம் மேற்கில் திரஷ்ட்வதி (சௌதாங்)யில் சங்கமிப்பதால் ஏற்படுவதாகும். திரஷ்ட்வதி நதியானது பருவகாலங்களில் நீரோட்டம் கொண்டதாக விவரிக்கப்படுகிறது (10.17). அஸ்வலயனா ஸ்ரவுடசூத்ரா மற்றும் சங்காயன ஸ்ரவுடசூத்ரா ஆகியன லாட்யாயன ஸ்ரவுடசூத்ரா கொண்டுள்ளது போன்ற செய்யுள்களைக் கொண்டுள்ளன.

வேத நூல்களுக்குப் பின்னர்[தொகு]

மகாபாரதம்[தொகு]

மகாபாரத்தின் கூற்றுப்படி சரஸ்வதி நதி பாலைவனத்தில் வறண்டு விட்டது. (வினாசனா அல்லது ஆதர்சனா எனும் இடத்தில்)[26] அவ்வாறு மறைந்தப் பின்னர் சில இடங்களில் மீண்டும் தோன்றுகிறது[27] மற்றும் கடலில் 'அவசரமாக' இணைகிறது.[28] ம.பா. 3.81.115 பாடல் குருஷேத்திரத்தை சரஸ்வதியின் தெற்காகவும் திரஷ்ட்வதியின் வடக்காகவும் இடம் சுட்டுகிறது. Dried up seasonal Ghaggar River in Rajasthan and haryana reflects the same geographical view as described in Mahabharata.

புராணங்கள்[தொகு]

  • பல புராணங்கள் சரஸ்வதி நதியினை விவரிக்கின்றன; அத்தோடு நதியானது பல ஏரிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது (சரஸ்).[29] ஸ்கந்த புராணத்தில் சரஸ்வதியின் ஐந்து பிரிவுகளாய் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.[30]
  • ஸ்கந்த புராணம், சரஸ்வதி நதியானது பிரம்மாவின் நீர்க் குவளையிலிருந்து உருவாகிறது. மேலும் இமயத்தின் பிளாக்சாவிலிருந்தும் பாய்கிறது. அதன் பிறகு அது மேற்கில் கேதாராவில் திரும்புகிறது. மேலும் நிலத்திற்கு அடியிலும் கூடப் பாய்கிறது, என்று குறிப்பிடுகிறது.
  • வாமன புராணத்தின் பாடல் 32.1-4 ற்கு இணங்க, சரஸ்வதி நதி ப்ளாக்சா மரத்திலிருந்து (அரச மரம்) எழுகிறது.[31]

ஸ்ம்ருதிக்கள்[தொகு]

  • மனு ஸ்ம்ருதியில் முனிவரான மனு வேத பண்பாட்டை சரஸ்வதிக்கும் டிரஷ்ட்வதி நதிகளுக்கும் இடையில் நிறுவினார் என்று எழுதப்பட்டுள்ளது. அவர் வெள்ளத்திலிருந்து தப்பி மீண்டவராவார். ஆகையால் சரஸ்வதி நதி பிரம்மவார்த்தாவின் மேற்குப் புற எல்லையாகும்: "சரஸ்வதி மற்றும் டிரஷ்வதிக்கு இடையிலான நிலப்பகுதி இறைவனால் உருவாக்கப்பட்டுள்ளது; இந்நிலமே பிரம்மவார்த்தாவாகும்."[32]
  • அது போலவே வசிஷ்ட தர்ம சூத்திரம் 1.8-9 மற்றும் 12-13 பாடல்கள் சரஸ்வதி பாலைவனத்தில் மறையும் கிழக்கிற்கும், கலக்கவானவின் மேற்கிற்கும், பரியாத்ரா மற்றும் விந்திய மலைகளின் வடகிற்கும் மற்றும் இமயத்தின் தெற்கிற்கும் ஆர்யவர்த்தாவை இடம் சுட்டுகின்றன. பதஞ்சலியின் மகாபாஷ்யா ஆர்யவர்த்தாவை வசிஷ்ட தர்ம சூத்திரம் போலவே விளக்குகிறது.
  • பௌதயான தர்மசூத்திரம் இது போன்ற விளக்கங்களை அளிக்கிறது. அதில் ஆர்யவர்த்தாவை கலக்கவானாவிற்கு மேற்கிலும், ஆதர்சனாவிற்கு கிழக்கிலும் (சரஸ்வதி நதி பாலைவனத்தில் மறையும் இடம்)இமயத்தின் தெற்கிலும் விந்தியாவின் வடக்கிலும் இருக்கும் நிலப்பகுதியாக அறிவித்துள்ளது.

அடையாளமறிதல்[தொகு]

பிற்கால வேத மற்றும் வேதத்திற்கு பிந்தைய காலங்களில் சரஸ்வதி நதியானது பொதுவாக கக்கார் நதியுடன் அடையாளம் காணப்படுகிறது. ஆனால் கணிசமான அளவு பெரிதான நதி ஒன்றை சம்பந்தப்படுத்தல் முற்கால வேத குறிப்புகளின் அதே போன்ற அடையாளப்படுத்தலைச் சிக்கலாக்குகிறது; ஒன்று கக்கார் நதி முற்காலத்தில் மிக வலிமையுடையதாக இருக்க வேண்டும் அல்லது முன் வேத கால சரஸ்வதி வேறெங்கோ அமைந்திருக்க வேண்டும் [33].

கக்கார்-ஹக்ரா நதி[தொகு]

களப்பணி ஆய்வுகள் மற்றும் சமீபத்திய செயற்கைக் கோள் படங்களின் சான்றுகள் சாட்டியுரைப்பது கக்கார்-ஹக்ரா அமைப்பு நிர்ணயிக்கப்படாத இறந்த காலத்தில் சட்லெஜ் மற்றும் யமுனா ஆகியவற்றை உபநதிகளாகக் கொண்டிருந்தது என்பதையேயாகும். அதன் கழிமுகப்பகுதியாக ராண் ஆஃப் கட்ச் நிலைத்திருப்பது நிகழக்கூடியதாகும். இச்சூழலில், புவியியல் மாற்றங்கள் சட்லெஜ்ஜை சிந்து நதியினை நோக்கியும் யமுனையை கங்கையை நோக்கியும் திசை மாற்றியது. இதைத் தொடர்ந்து கடலை அடைய நதிக்கு போதுமான அளவு நீர் எப்போதும் இல்லாமற் போய் தார் பாலைவனத்தில் வறண்டு போனது. ரிக்வேதத்திற்கு முந்தைய சரஸ்வதி இத்தகைய மாற்றங்கள் நிகழும் முன்னர் இருந்த கக்கார்-ஹக்ராவை தொடர்புபடுத்துகிறது எனப் பரிந்துரைக்கப்பட்டது ("பழைய கக்கார்") மற்றும் ரிக்வேதத்திற்கு பிந்தைய கால இறுதியில் இதிகாச சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது சட்லெஜ்ஜும் யமுனையும் திசை மாறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கக்கார்-ஹக்ராவையும் தொடர்புபடுத்துகிறது என்று பரிந்துரைக்கிறது.

கக்கார் நதியிம் அகன்ற நதிப்படுக்கையானது (வறண்ட கால்வாய்) இமாலய பனி யுக பனிக்கட்டி ஆறுகளின் பெரும் உருகுதலின் காலத்தில் நதி நீர் நிரம்பிய ஓட்டத்துடன் இருந்தது என்பதை சுட்டுகிறது. அது சில 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. மேலும் பிறகு பிரதேசம் முழுதும் தற்போதைய ஹக்ரா நதியின் வறண்ட கால்வாயில் தொடர்ந்து, சாத்தியமாக ராணா வளைகுடாவில் வெறுமையாகியிருக்கலாம். அது ஊகமாக அதன் கிளை நதிகள் இந்து நதியமைப்பு மற்றும் யமுனா நதி ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டதன் காரணமாக வறண்டிருக்கலாம். மேலும் பின்னர் கூடுதலாக அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காடழிப்பினாலும் அதிகப்படியான மேய்ச்சலாலும் ஏற்பட்ட நீரிழப்பின் காரணமாகவும் வறண்டிருக்கலாம்.[5] இது சிலரால் கி.மு. 1900 ஆம் ஆண்டுகளுக்கு சமீபமாக நிகழ்ந்திருக்கும் என ஊகிக்கப்படுகிறது.[6][7]

வண்ணமிடப்பட்ட சுட்ட மண் தளங்கள் (சிர்கா. கி.மு.1000) கக்ரா-ஹக்ராவின் படுகையில் காணப்படுவதன்றி நதிக்கரைகளில் அல்ல. அது நதியானது இக்காலக்கட்டத்திற்கு முன்பே வறண்டுவிட்டது என்பதைச் சுட்டுகிறது.[8]

ஹெல்மாண்ட் நதி[தொகு]

முற்கால ரிக்வேத சரஸ்வதி நதியை அடையாளம் காண்பதற்கான கூற்றுக்கள் ஆஃப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் நதியையும் உள்ளடக்கியுள்ளது. அது சங்க்லாக் மலைத்தொடரால் சிந்து நதியின் ஆற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஹெல்மாண்ட் வரலாற்று ரீதியாக அவெஸ்தான் ஹேதுமண்ட் என்பதைத் தவிர ஹெராக்ஸ்வைதி எனும் பெயரையும் தாங்கிக் கொண்டுள்ளது. அது சம்ஸ்கிருத சரஸ்வதியை அவெஸ்தான் மொழி வடிவத்தோடு தொடர்புபடுத்துகிறது. சரஸ்வதியைக் குறித்து ரிக்வேதத்தில் பயன்படுத்தப்படுள்ள அதே போன்ற வரையறைகளுடன் அவெஸ்தா ஹெல்மாண்ட்டை மிகவும் மெச்சுகிறது. " தாரளமான, உன்னதமான ஹேட்மண்ட் தனது வெண்மையான அலைகளை பொங்கி வழிகிற வெள்ளத்தில் உருண்டோட பெருகச் செய்கிறது".[38]

கொச்சார் (1999) ஹெல்மாண்ட் நதியானது சூக்தங்கள் 2.41, 7.36 முதலியவற்றில் முற்கால ரிக்வேத சரஸ்வதியை அடையாளப்படுத்துகிறது என வாதிடுகிறார். மேலும் நாதிஸ்துதி சூக்தம் (10.75) சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயற்றப்பட்டது. அது ரிக்வேதப் பண்பாட்டைக் கொண்டிருந்தவர்கள் கிழக்குப் புறமாக 600 கி.மீ. கடந்து மேற்கு கங்கைச் சமவெளியை நோக்கி கிழக்குப் புறமாக இடம் பெயர்ந்தப் பிறகு நிகழ்ந்தது. இக்காலக்கட்டத்தில் சரஸ்வதி கற்பனையான நதியாக மாறிப்போயிருந்தது. மேலும் பெயரானது கக்காருக்கு இடம் மாற்றப்பட்டது. கக்கார் பாலைவனத்தில் மறைந்தது.

ஹெல்மாண்ட் நதியை முற்கால ரிக்வேத சரஸ்வதியுடன் அடையாளப்படுத்துவது கடினமற்றதாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு, ஈரானிய பீடபூமியில் உள்ள சதுப்பு நிலத்தில் பாய்கிறது (விரிவான ஈர நிலம் மற்றும் ஹாமூன்-இ-ஹெல்மாண்ட் ஏரி அமைப்பு) என்பது ரிக்வேத மற்றும் பிற்கால வேத விவரிப்பான சமுத்திரம் என்பதற்கு பொருந்தாது. பொதுவாக சமுத்திரா எனும் சொல் "பெருங்கடல்" எனும் பொருளைச் சுட்டுவதாகவேயுள்ளது.

தற்கால சரஸ்வதிகள்[தொகு]

  • சர்ஸுதி என்பதே நதியின் தற்காலப் பெயராகும். அது மலைச் சார்ந்த பிரதேசத்தில் உருவாகி (அம்பாலா மாவட்டத்தில்) பெப்ஸுவில் ஷத்ரானாவிற்கு அருகில் கக்காருடன் இணைகிறது. சட்லெஜ்ஜின் வறண்ட நைவாலா கால்வாய் சாதுல்கர் அருகில் (ஹனுமன்கர்) கக்காருடன் இணைகிறது. சூரத்கர் அருகில் கக்கார் வறண்ட திரஷட்வதி நதியால் இணைக்கப்படுகிறது.
  • இராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் தோன்றும் நதியின் பெயர் சரஸ்வதியாகும். சித்பூர் மற்றும் பதான் வழியாகப் பாய்ந்து ராண் ஆஃப் கட்ச்சில் இறுதியாகக் கலக்கிறது.
  • வங்காளத்தில் ஹூக்ளி நதியின் முன்னாள் உபநதியான சரஸ்வதி நதி 17 ஆம் நூற்றாண்டிலிருந்து வறண்டு காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Indische Alterthumskunde
  2. Sacred Books of the East, 32, 60
  3. Oldham 1893 pp.51–52
  4. http://books.google.com/books?id=evOZEWralVMC&pg=PA158&dq=saraswati+river+dried+up&lr=&as_brr=3&cd=13#v=onepage&q=&f=false The ancient Indus Valley:new perspectives By Jane McIntosh
  5. http://www.fao.org/docrep/007/ad526e/ad526e09.htm
  6. Mughal, M. R. Ancient Cholistan. Archaeology and Architecture. Rawalpindi-Lahore-Karachi: Ferozsons 1997, 2004
  7. J. K. Tripathi et al., “Is River Ghaggar, Saraswati? Geochemical Constraints,” Current Science, Vol. 87, No. 8, 25 October 2004
  8. Gaur, R. C. (1983). Excavations at Atranjikhera, Early Civilization of the Upper Ganga Basin. Delhi.

மேலும் காணவும்[தொகு]

  • சப்த சிந்து
  • சரஸ்வத் பிராமண
  • சரஸ்வதி நதி (வங்காளம்)
  • திரிவேணி சங்கமம்
  • சரஸ்வதி (பெண் கடவுளர்)

குறிப்புதவிகள்[தொகு]

  • Edwin Bryant (2001). The Quest for the Origins of Vedic Culture. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-513777-9. 
  • Gupta, S.P. (ed.). (1995). The lost Saraswati and the Indus Civilization. Kusumanjali Prakashan, Jodhpur.
  • Hock, Hans (1999) Through a Glass Darkly: Modern "Racial" Interpretations vs. Textual and General Prehistoric Evidence on Arya and Dasa/Dasyu in Vedic Indo-Aryan Society." in Aryan and Non-Aryan in South Asia, ed. Bronkhorst & Deshpande, Ann Arbor.
  • Keith and Macdonell. 1912. Vedic Index of Names and Subjects.
  • Kochhar, Rajesh, 'On the identity and chronology of the Ṛgvedic river Sarasvatī' in Archaeology and Language III; Artefacts, languages and texts , Routledge (1999), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-10054-2.
  • Lal, B.B. 2002. The Saraswati Flows on: the Continuity of Indian Culture. New Delhi: Aryan Books International
  • Oldham, R.D. 1893. The Sarsawati and the Lost River of the Indian Desert. Journal of the Royal Asiatic Society. 1893. 49-76.
  • Puri, VKM, and Verma, BC, Glaciological and Geological Source of Vedic Sarasvati in the Himalayas , New Delhi, Itihas Darpan, Vol. IV, No.2, 1998 [1]
  • Radhakrishna, B.P. and Merh, S.S. (editors): Vedic Saraswati: Evolutionary History of a Lost River of Northwestern India (1999) Geological Society of India (Memoir 42), Bangalore. Review (on page 3) Review
  • Shaffer, Jim G. (1995). Cultural tradition and Palaeoethnicity in South Asian Archaeology. In: Indo-Aryans of Ancient South Asia. Ed. George Erdosy.. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-014447-6. 
  • S. G. Talageri, The RigVeda - A Historical Analysis chapter 4

புற இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Rigveda

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Babauever/சரஸ்வதி_நதி&oldid=3797157" இலிருந்து மீள்விக்கப்பட்டது