நா. அசோக்குமார்
நா. அசோக்குமார் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 April 1957 | (வயது 67)
தேசியம் | இந்தியர் |
வேலை | அரசியல்வாதி, சமூக சேவகர் |
பேராவூரணி நா. அசோக்குமார் அல்லது நா. அசோக்குமார் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். [1] இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுசட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வி.நாராயணசாமி (தந்தை) மற்றும் நா. ஜெயம் (அம்மா) ஆகியோருக்கு 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தவர். தமிழ்நாட்டின் தேவக்கோட்டையில் உள்ள பிரிட்டோ பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
1975ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியில் சேர்ந்ததன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் பேராவூரணி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆண்டு | கட்சி | தொகுதி | முடிவு |
---|---|---|---|
2021 | திமுக | பேராவூரணி | வெற்றி[2] |
2016 | திமுக | பேராவூரணி | தோல்வி[3] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "16th Assembly Members". www.assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
- ↑ "Peravurani Election Result". பார்க்கப்பட்ட நாள் 12 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.