நவரத்தின மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நவரத்தின மாலை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் அவரது ஆசிரியர் [[ஞானப்பிரகாசர்|ஞானப்பிரகாசரைப் போற்றிப் பாடப்பட்டது. கட்டளைக் கலித்துறையாலான ஒன்பது பாடல்கள் இதில் உள்ளன. இவரது ஞானப்பிரகாச மாலை நூலில் உள்ள அத்துணைச் சிறப்பு இதில் இல்லை.

இந்த நூலில் முன்னோர் தொடர்

  • என்னது யான் என்பதுவும் நான் பிறர் செய்தார் எனலும் [2] [3]
பாடல்- எடுத்துக்காட்டு[தொகு]

குருவாரம் தோறுமே வந்து உனைப் போற்றவும், கூறிய சொல்
கருவே நின் காயத்தை நீக்கினையால் அடியேன் தனக்கு
ஒரு வாசகம் இன்றி என்னைப் பிரிவது உனக்கு அழகோ
திருவாசகம் உரை ஞானப்ரகாச சிகாமணியே [4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 245. 
  2. யான் செய்தேன் பிறர் செய்தார் என்னாது யான் என்னும் இக் கோண் - சிவஞான சித்தியார் அடிகளை எடுத்தாள்கிறார்.
  3. ஒவ்வெருவர் உடலிலும் உள்ள அணுவின் 100 பங்கில் ஒரு கூறான கோண் யான், எனது என்று கூறிக்கொண்டே இருக்குமாம்
  4. 7 ஆம் பாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவரத்தின_மாலை&oldid=1447771" இலிருந்து மீள்விக்கப்பட்டது