நபன்னா
நபன்னா Nabanna | |
---|---|
மாற்றுப் பெயர்கள் | ஊக்ளி ஆற்றுப்பால ஆணையக் கட்டிடம் |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | செயல்படுகிறது |
வகை | நிர்வாகக் கட்டிடம் |
இடம் | அவுரா, மேற்கு வங்காளம், இந்தியா |
முகவரி | 325, சரத் சாட்டர்ச்சி சாலை, சிப்பூர், அவுரா-711102 |
துவக்கம் | 5 அக்டோபர் 2013 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 14 |
நபன்னா (Nabanna) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள அவுரா மாவட்டத்திலிருக்கும் அவுரா நகரிலுள்ள ஒரு கட்டிடம் ஆகும். மேற்கு வங்கத்தின் தற்காலிக மாநில தலைமைச் செயலகம் நபன்னாவில் இயங்கியது. மந்திர்தலா, சிப்பூர் என்ற முகவரியில் நபன்னா கட்டிடம் அமைந்துள்ளது.[1] 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 அன்று முதலமைச்சர் மம்தா பானர்ச்சி நபன்னா கட்டிடத்தை திறந்து வைத்தார்.[2][3]
14 மாடி கட்டிடமாக உள்ள இங்கு அரசாங்கத்தின் ஆடை பூங்கா, ஊக்ளி ஆற்றுப் பால ஆணைய அலுவலகம் போன்றவை இருந்தன, பொதுப்பணித்துறை ஒன்றரை மாதங்களுக்குள் இக்கட்டிடத்தை புதிய தலைமைச் செயலகமாக மாற்றியது.[4] முதலமைச்சர் அலுவலகம் மேல் மாடியில் இயங்கத் தொடங்கியது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Teething troubles at Nabanna ease out. Indian Express (9 October 2013).
- ↑ "Chaos greets employees at Nabanna" பரணிடப்பட்டது 2013-10-12 at the வந்தவழி இயந்திரம். The Times of India. (8 October 2013).
- ↑ Facelift for Writers' Building: Didi shifts to Nabanna. Business Standard (8 October 2013).
- ↑ Mamata shifts office to Nabanna. The Hindu (6 October 2013).