த. அஜந்தகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

த.அஜந்தகுமார் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். யார்வத்தை, வதிரி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் வசிக்கிறார். கவிதை, சிறுகதை, விமர்சனம், இதழியல் ஆகிய துறைகளில் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

தருமராசா அஜந்தகுமார். க. பொ.த உயர்தரத்தை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர்.

ஈழத்துச் சஞ்சிகைகளான கலைமுகம், ஞானம், புதிய தரிசனம்,தாயகம்,அம்பலம்,நடுகை,ஜீவநதி,தெரிதல் மற்றும் பல சஞ்சிகைகளில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், வலம்புரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார்.

வார்ப்பு, காற்றுவெளி, திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.

இவை தவிர க. பொ. உயர்தர மாணவர்களுக்கான பாடநூல் தொகுப்பாசிரியராகவும் உள்ளார். இவ்வகையில் தமிழ்ச் சிறுகதைகள், உரைநடைக்கோவை ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

[தொகு] இதழ் பங்களிப்பு

  • புதியதரிசனம் என்ற காலாண்டு கலை இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

[தொகு] இலக்கியச் செயற்பாடு

  • 2010 - தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரை வாசித்தார்.
  • 2011- கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை வாசித்தார்.
  • ஞானம் பரிசுக் கதைத் தொகுதிகளான கொக்கிளாய் மாமி, சிறைப்பட்டிருத்தல், கருமேகம் தாண்டிய நிலவு ஆகிய தொகுதிகளிலும் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடான பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள் ஆகிய தொகுதிகளில் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன
  • ஜீவநதி வெளியீடாக வெளிவந்த கவியில் உறவாடி... தொகுதியில் இவருடைய கவிதை வெளிவந்துள்ளது.

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • ஒரு சோம்பேறியின் கடல் (கவிதைகள், அம்பலம் வெளியீடு)
  • தனித்துத் தெரியும் திசை (ஆய்வு, புதிய தரிசனம் வெளியீடு)

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=த._அஜந்தகுமார்&oldid=1105389" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி