தேவேந்தர் யாதவ்
தேவேந்தர் யாதவ் (Devender Yadav) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். அனைத்திந்திய காங்கிரசு கட்சி செயலாளராகவும் இராசத்தான் மாநிலத்தின் காங்கிரசு கட்சி இணை பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். பாதலி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2008-2013, 2013-2015 ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அயேசு யாதவால் 35376 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடிக்கப்பட்டார் [1].