திரு ஆனைக்காப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரு ஆனைக்காப் புராணம் (திருவானைக்காப் புராணம்) [1] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய இரண்டு புராணங்களில் ஒன்று. மற்றொன்று திருமழப்பாடிப் புராணம். [2] [3] இந்த இரண்டு புராணங்களில் மழபாடிப் புராணம் அச்சாகியுள்ளது. ஆனைக்காப் புராணம் அச்சாகவில்லை.

திருவான்மியார் டாக்டர் சாமிநாதையர் நூலகத்தில் தந்திவனப் புராணம் என்னும் பெயரில் சுவடியாக உள்ளது. [4] [5] [6]

திருவானைக்காப் புராணம் 571 பாடல்களைக் கொண்டது. இவை 14 சருக்கங்களாய் அமைந்துள்ளன. மழுவை என்னும் மழபாடிப் புராணம் பாடும்படித் தூண்டிய உலகநாத முனிவரே ஊக்கம் தந்து இதனையும் பாடும்படி செய்தார். இதனை இப் புராணத்தின் இறுதிப் பாடல் குறிப்பிடுகிறது.

அறம் தரு காலை வாழி, அகிலாண்ட அம்மை வாழி
நிறைந்திடும் அனைத்தும் கொற்றம் நிலமிசை வாழ்க, பாசம்
துறந்திடும் உலகநாதன் தொலைவு இல் மெய்ப்புகழே வாழி
திறந்திடு செம்பு நாதன் திருவடி வாழி வாழி.

இதனை இந்நூலின் பாடல் பாங்கிற்கும் ஓர் எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. இருந்தமிழ்ப் புலவர் உய்ய இபவனம் மழுவை என்னும் திருந்து சீர்த் தலப்புராணத் தெள்ளமுது அளித்த செல்வப் பெரும்புகழ்க் கமலை ஞானப் பிரகாசன் – கமலை ஞானப் பிரகாசரின் மாணாக்கர் அளகைச் சம்பந்த முனிவர் பாடல்.
  3. ஞானப்பிரகாசர் மான்மியம் என்னும் நூலும் இதனைக் குறிக்கிறது.
  4. சுவடி எண் 621
  5. தந்தி = யானை, வனம் = கா
  6. காகிதப் பிரதி ஒன்றும் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு_ஆனைக்காப்_புராணம்&oldid=1430404" இலிருந்து மீள்விக்கப்பட்டது