ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா
João Bernardo Vieira
கினி-பிசாவு நாட்டுத் தலைவர்
பதவியில்
1 அக்டோபர் 2005 – 2 மார்ச் 2009
பிரதமர்கார்லொஸ் ஜூனியோர்
அரிசுடிடெசு கோமசு
மார்ட்டீனோ காபி
கார்லொஸ் கொரெயா
கார்லொஸ் ஜூனியோர்
முன்னையவர்என்றிக் ரோசா
பதவியில்
16 மே 1984 – 7 மே 1999
முன்னையவர்கார்மன் பெரெய்ரா
பின்னவர்அன்சுமானே மானே
பதவியில்
14 நவம்பர் 1980 – 14 மே 1984
பிரதமர்விக்டர் மரியா
முன்னையவர்லூயிஸ் கப்ரால்
பின்னவர்கார்மன் பெரெய்ரா
கினி-பிசாவு பிரதமர்
பதவியில்
28 செப்டம்பர் 1978 – 14 நவம்பர் 1980
குடியரசுத் தலைவர்லூயிஸ் கப்ரால்
முன்னையவர்கான்சுடண்டீனோ டெய்க்செய்ரா
பின்னவர்விக்டர் மரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-04-27)ஏப்ரல் 27, 1939
பிசாவு, போர்த்துக்கீச கினி
இறப்புமார்ச்சு 2, 2009(2009-03-02) (அகவை 69)
பிசாவு, கினி-பிசாவு
அரசியல் கட்சிசுயேட்சை அரசியல்வாதி

ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா (João Bernardo "Nino" Vieira, ஏப்ரல் 27, 1939 - மார்ச் 2, 2009) கினி-பிசாவு நாட்டின் தலைவராக 2005 அக்டோபர் 1 முதல் 2009 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்ந்தவர். முன்னராக 1980 முதல் 1999 வரை இவர் கினி-பிசாவு நாட்டின் தலவராக இருந்து உள்நாட்டுப் போரின் பின்னர் தனது பதவியை இழந்திருந்தார். 2005 இ மீண்டும் அரசியலில் நுழைந்து அவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2009 மார்ச் 2 ஆம் நாள் இவரை எதிர்த்த இராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கினி-பிசாவு நாட்டின் இராணுவத் தளபதி பட்டிசுட்டா வாய் என்பவர் குண்டுவெடிப்பு ஒன்றின் போது கொல்லப்பட்டார்[1].

மேற்கோள்கள்[தொகு]