சொப்பன சுந்தரி (நடனக்கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொப்பன சுந்தரி
பணிநடன இயக்குநர்

சொப்பன சுந்தரி இந்திய நடன கலைஞர் ஆவார். குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய , கலைஞரான இவர் ஒரு நடன அமைப்பாளரும் மற்றும் பாடகரும் ஆவார்.

விருதுகள்[தொகு]

இவருக்கு 2003 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது,[1] அத்துடன் இலக்கிய கலைச்சபை மற்றும் சங்கீத நாடக அகாதமி விருதும் பெற்றுள்ளார். ஜென்மபூமி மேரி பியாரி என்ற அவரது ,இசைத்தொகுப்பு நல்ல வரவேற்பை பெற்றது.[2] குச்சிப்புடி நடன உலகம் (The World of Koochipoodi Dance) மற்றும் பாரம்பரிய நடனத்தின் வேர்களைத் தேடி போன்ற புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். இவர் தில்லியில் அமைந்துள்ள குச்சிப்புடி நடன மையத்தின் நிறுவனர் ஆவார். பல இளந்தலைமுறை குச்சிப்புடி நடனக்கலைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் குருவாகவும் இருந்துள்ளார்.[3]

வாழ்க்கை[தொகு]

சென்னையில் பிறந்த இவர் ஆந்திர பிரதேசம் மற்றும் தில்லியில் வாழ்கிறார்.[4][5] அன்சு பிரகாஷ் என்பவர் இவரது கணவர் ஆவார்.

எழுதிய புத்தகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]