செ. கோ. விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. கோ. விசுவநாதன் (C. G. Viswanathan)(பிறப்பு மார்ச்சு 9, 1933) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகரம் அழகேசன் நகர்ப் பகுதியினைச் சார்ந்தவர். செங்கல்பட்டு தூய கொலம்பசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். விசுவநாதன் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். 1970 ஆம் ஆண்டு முதல் திருக்கழுகுன்றம் ஊராட்சித் தலைவராகவும், 1957 முதல் 1961 ஆம் ஆண்டு வரை செங்கல்பட்டு நகராட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1962 செங்கல்பட்டு திமுக 27,933 47.78
1967 செங்கல்பட்டு திமுக 43,428 60.53
1971 செங்கல்பட்டு திமுக 41,949 58.77

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 434. {{cite book}}: More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._கோ._விசுவநாதன்&oldid=3538161" இலிருந்து மீள்விக்கப்பட்டது