சுன் சூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுன் சூ

யூரிஹாமா, தோத்தோரி, ஜப்பானிலுள்ள சுன் சூவின் சிலை
பிறப்பு {{{birthname}}}
தெரியாது
இறப்பு தெரியாது
தொழில் படைத் தளபதி
இனம் சீனர்
எழுதிய காலம் கிமு 722–481 அல்லது கிமு 403–221 (சர்ச்சைக்கு உரியது)
கருப்பொருட்கள் படைத்துறை நுட்பம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
போர்க் கலை

சுன் சூ (மரபு சீனம்: 孫子, எளிய சீனம்: 孙子, பின்யின்: Sūn Zǐ சுன் த்சு) என்பவர், படை வியூகங்கள் பற்றிய, மிகவும் புகழ் பெற்ற, பண்டைய சீன நூலான போர்க் கலை என்னும் நூலை எழுதினார் என நம்பப்படுகின்றது. இது தாவோயிச முறைகளுக்கான ஒரு முதன்மையான எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகின்றது. இவர் உண்மையாக வாழ்ந்த ஒரு வரலாற்று மனிதரா இல்லையா என்பதில் சர்ச்சை நிலவுகிறது. மரபுவழிக் கதைகள் இவரை கிமு 544-496 காலப்பகுதியில் வாழ்ந்த வூ என்னும் அரசரிடம் வீரம் மிக்க தளபதியாக இருந்தவர் என்கின்றன. இவர் ஒரு வரலாற்று மனிதர்தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் அறிஞர்கள், இவரது நூலில் காணப்படும் விபரங்களைக் கொண்டு இவர், சீனாவில் நாடுகள் போரிட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியைச் (கிமு 403-221) சேர்ந்தவராக இருக்கலாம் என்கின்றனர். மரபுவழிக் கதைகளின் படை இவரது வழிவந்தவரான சுன் பின் என்பவரும் பறைத்துறை நுட்பங்கள் பற்றி நூலொன்று எழுதியிருப்பதாகத் தெரிவிக்கின்றன.

போர்கலை நூலின் எழுத்தாளராகவும், வரலாற்றுப் புகழ் கொண்ட ஒருவராகவும், சுன் சூ, சீனாவினதும், பிற ஆசிய நாடுகளினதும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர். 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில், போர்க் கலை நூல், மேல்நாட்டுச் சமூகத்திலும் பெயர் பெற்றதுடன், செயல்முறைத் தேவைகளுக்கும் பயன்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுன்_சூ&oldid=1351439" இருந்து மீள்விக்கப்பட்டது