சிவானந்த போத சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவானந்த போத சாரம் என்னும் நூல் கமலை ஞானப்பிரகாசர் இயற்றியது.
இந்த நூலின் பெயரில் ‘சாரம்’ என்னும் சொல் சேர்க்கப்பட்டுள்ளதால் ‘சிவானந்த போதம்’ என்னும் நூல் முன்பே இருந்தது எனவும், அதன் சாரமாக இந்த நூல் இயற்றப்பட்டது எனவும் கருத இடமுண்டு.

சைவ சித்தாந்த நெறியில் 30 அவதாரங்கள் கூறப்படும்.
அவற்றின் நிலைகளைப் 10 காரியங்களில் (தசகாரியம்) அடக்கிக் காட்டுவர். இவற்றை விளக்கிக் கூறுவது இந்த நூல்.

  • நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவானந்த_போத_சாரம்&oldid=1445803" இலிருந்து மீள்விக்கப்பட்டது