சிற்றம்பலநாடி கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்றம்பலநாடி கட்டளை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்னும் சைவ ஆசாரியரால் எழுதப்பட்டது. சாத்திர உண்மைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அளவுபடுத்தி உரைக்கும் உரைநடை நூல் இது.

பிற்காலத்தில் வேதாந்த-பரமாகவும், சித்தாந்த-பரமாகவும் பல நூல்கள் தோன்றின. இவற்றிற்கெல்லாம் ஆதியாக அமைந்த நூல் இந்தக் கட்டளை நூல்.

மெய்கண்ட சாத்திரக் கட்டளை என்னும் புதுப்பெயர் சூட்டப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது. [1]

இந்த நூல் நெய்கண்ட சாத்திர மரபாகிய பதி, பசு, பாசம் என்னும் அடிப்படைத் தத்துவங்களை விளக்குகிறது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. சித்தாந்தம், மலர் 15, (1942), இதழ் 6&9
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றம்பலநாடி_கட்டளை&oldid=1356209" இலிருந்து மீள்விக்கப்பட்டது